அதிரை நியூஸ்: மே-15
நடப்பு 2017 ஆம் ஆண்டில் லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் சாதனையை முறியடித்து, 'ஒரே ஒரு ரன்வேயுடன் பிஸியாக செயல்படும் விமான நிலையம்' (busiest Airport with Single Runway) என்ற பெயரை மும்பை விமான நிலையம் தட்டிச் சென்றுள்ளது. அதாவது சராசரியாக ஒவ்வொரு 65 நொடிகளுக்கு ஒரு விமானம் புறப்படவோ அல்லது தரையிறங்கவோ செய்கின்றது, கார்கோ விமானங்கள் உட்பட.
லண்டன் கேட்விக் விமான நிலையமும் ஒரே ஒரு ரன்வேயுடன் தினமும் 757 விமான புறப்பாடு அல்லது தரையிறக்க நடமாட்டத்தை கையாண்டு வந்த நிலையில் மும்பை விமான நிலையம் 837 விமான நடமாட்டங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது. மேலும், கேட்விக் விமான நிலையம் 44 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ள நிலையில் மும்பை 45.2 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது அதாவது ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகளையே கையாள முடியும் என்ற தனது தகுதிக்கும் மீறி சாதனை செய்துள்ளது. எனினும், 3 ரன்வேக்களுடன் செயல்படும் டெல்லி விமான நிலையம் 57.7 மில்லியன் பயணிகளை கையாண்டு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
உலகின் பெரிய நகரங்களான நியூ யார்க், லண்டன், துபை, சிங்கப்பூர் போன்றவை ஒன்றுக்கு மேற்பட்ட விமான நிலையங்களையும் பல அடுக்கு ரன்வேக்களையும் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை விமான நிலையத்திற்கு சொந்தமான நிலப்பரப்பின் பெரும் பகுதி சுற்றியுள்ள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் நவி மும்பை பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள ரன்வேயையும், டேக்ஸிவேயையும் ஓரளவு விஸ்தீரணப்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.
இந்தியாவில் உள்ள வேறு எந்த விமான நிலையத்தையும் விட, மிக அதிநவீன பிரீமியம் பயணிகள் விமானமான Airbus A350-900 என்ற மாடலில் 2 விமானங்களை தினசரி இயக்குவதன் மூலமும் மும்பை விமான நிலையம் இன்னொரு சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. அதேபோல் மும்பையிலிருந்து 95 உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
நடப்பு 2017 ஆம் ஆண்டில் லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் சாதனையை முறியடித்து, 'ஒரே ஒரு ரன்வேயுடன் பிஸியாக செயல்படும் விமான நிலையம்' (busiest Airport with Single Runway) என்ற பெயரை மும்பை விமான நிலையம் தட்டிச் சென்றுள்ளது. அதாவது சராசரியாக ஒவ்வொரு 65 நொடிகளுக்கு ஒரு விமானம் புறப்படவோ அல்லது தரையிறங்கவோ செய்கின்றது, கார்கோ விமானங்கள் உட்பட.
லண்டன் கேட்விக் விமான நிலையமும் ஒரே ஒரு ரன்வேயுடன் தினமும் 757 விமான புறப்பாடு அல்லது தரையிறக்க நடமாட்டத்தை கையாண்டு வந்த நிலையில் மும்பை விமான நிலையம் 837 விமான நடமாட்டங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது. மேலும், கேட்விக் விமான நிலையம் 44 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ள நிலையில் மும்பை 45.2 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது அதாவது ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகளையே கையாள முடியும் என்ற தனது தகுதிக்கும் மீறி சாதனை செய்துள்ளது. எனினும், 3 ரன்வேக்களுடன் செயல்படும் டெல்லி விமான நிலையம் 57.7 மில்லியன் பயணிகளை கையாண்டு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
உலகின் பெரிய நகரங்களான நியூ யார்க், லண்டன், துபை, சிங்கப்பூர் போன்றவை ஒன்றுக்கு மேற்பட்ட விமான நிலையங்களையும் பல அடுக்கு ரன்வேக்களையும் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை விமான நிலையத்திற்கு சொந்தமான நிலப்பரப்பின் பெரும் பகுதி சுற்றியுள்ள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் நவி மும்பை பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள ரன்வேயையும், டேக்ஸிவேயையும் ஓரளவு விஸ்தீரணப்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.
இந்தியாவில் உள்ள வேறு எந்த விமான நிலையத்தையும் விட, மிக அதிநவீன பிரீமியம் பயணிகள் விமானமான Airbus A350-900 என்ற மாடலில் 2 விமானங்களை தினசரி இயக்குவதன் மூலமும் மும்பை விமான நிலையம் இன்னொரு சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. அதேபோல் மும்பையிலிருந்து 95 உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.