.

Pages

Wednesday, June 7, 2017

முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கராஜன், ரூ.1 லட்சம் தீ விபத்து நிவாரணம் வழங்கினார் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 05
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமையில், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகையை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

கடந்த மே 29ந் தேதி அதிராம்பட்டினம் கரையூர் தெரு மருதையன் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது.

இந்நிலையில், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன், தீ விபத்து பகுதிகளை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு, பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ரூ. 2,000 வீதம், மொத்தம் 50 குடும்பங்களுக்கு, ரூ. 1 லட்சம் தீ விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கினார். இந்த தீ விபத்தில் பாதிப்படைந்த தமாகா மீனவர் அணி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கண்ணனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதில், தமாகா பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், வீரப்பன், சகாதேவன், இதயதுல்லா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.