அதிரை நியூஸ்: ஜூன் 07
அமீரகத்தில் பணியாற்றும் வீட்டுப் பணியாளர் உரிமைகள் தொடர்பான புதிய சட்ட வரைவுகளை அமீரக தேசிய பெடரல் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்வழி வீட்டுப் பணியாளர்களுக்கு வாராந்திர விடுமுறை, ஒரு மாத சம்பளத்துடன் கூடிய வருட விடுமுறை, பாஸ்போர்ட், அடையாள அட்டைகள் போன்றவற்றை தங்களுடனேயே வைத்திருக்கும் உரிமைகள், முதலாளி தொழிலாளர் இடையே எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பன போன்றவற்றை உறுதி செய்துள்ளது.
அமீரக ஜனாதிபதி ஷேக் முஹம்மது கலீஃபா அவர்களின் இறுதி உத்தரவுக்காக காத்திருக்கும் இந்த சட்ட வரைவில் தினமும் 12 மணிநேர ஓய்வு நேரமும் அதிலும் 8 மணிநேர தொடர் ஓய்வும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர், முகவர் மற்றும் முதலாளி ஆகியோர் ஒரே ஒப்பந்தத்தின் இணைக்கப்பட்டுள்ளனர், 18 வயதிற்கு கீழுள்ள தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
புதிய வீட்டுப் பணியாளர் சட்டத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள்:
ஓப்பந்தக் கட்டுப்பாடுகள்:
1. வீட்டுப் பணியாளர் ஒருவர் தனது சொந்த நாட்டை விட்டு புறப்படுமுன் அவருக்கான பணி ஒப்பந்த நகலை ஏஜென்டுகளாக செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கட்டாயம் அவரிடம் வழங்க வேண்டும்.
2. அமீரக மனிதவளத்துறை அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பணி ஒப்பந்த ஷரத்துக்கள் எழுதப்பட வேண்டும்.
3. பணி ஒப்பந்த ஷரத்துக்கள் மதிக்கப்படாத பட்சத்தில் அதை முறிக்க தொழிலாளிக்கும், அவரது முதலாளிக்கும் முழு உரிமை உண்டு. அதிலிருந்தும் மேலெழும் பிரச்சனைகளை தொழிலாளர் நல நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டு ஊழியர்களின் உரிமைகளும் சலுகைகளும்:
1. ஒப்பந்தத்தில் கண்டுள்ள சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 10 ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டும்.
2. வீட்டுப் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
3. தினமும் 12 மணிநேர ஓய்வு, அதிலும் 8 மணிநேரம் தொந்தரவு இல்லா தொடர் ஓய்வும் தர வேண்டும்.
4. வருடந்தோறும் 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் செல்லும் உரிமையுள்ளது.
5. வீட்டுப் பணியாளர்களுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் செய்து தருவது முதலாளியின் கடமை.
6. அதேபோல் வருடந்தோறும் 30 நாட்கள் மருத்துவ காரணங்களுக்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
7. 2 வருடங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் சென்று வர ரிட்டர்ன் விமான டிக்கெட் தருவது முதலாளியின் கடமை.
8. வீட்டுப் பணியாளர்களுக்கு முறையான இருப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும்.
9. வீட்டுப் பணியாளர்களுக்கு முறையாக உணவு வழங்குவதும் முதலாளியின் கடமை.
10. வீட்டுப்பணியாளருக்கு பணிகள் தொடர்புடைய ஆடைகளை எடுத்துத் தருவதும் முதலாளியின் கடமை.
11. வீட்டுத் தொழிலாளர்கள் தங்களுடைய பாஸ்போர்ட், அடையாள அட்டை, எமிரேட்ஸ் ஐடி போன்றவற்றை தங்களுடனே வைத்திருக்க முழு உரிமை உண்டு.
12. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில் இருசாராரில் யாரும் முறையிட்டு 15 நாட்களுக்குள் சமாதான தீர்வை பெற்றுக் கொள்ளலாம். 2 வாரங்களுக்கு பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படவிட்டால் வழக்கு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும்.
13. வீட்டு தொழிலாளர்கள் தொடுக்கும் வழக்கிற்காக எத்தகைய நீதிமன்ற கட்டணங்களையும் செலுத்தத் தேவையில்லை, அவை மனிதாபிமானத்துடன் தள்ளுபடி செய்யப்படும்.
வீட்டு ஊழியர்கள் தொடர்பில் சட்டரீதியான தடைகள்:
1. 18 வயதிற்கு கீழுள்ளவர்கள் வீட்டு வேலைகளில் பணியாற்ற அனுமதியில்லை.
2. ஒருவருடைய இனம், நிறம், பாலினம், மதம், அரசியல் காரணங்களுக்காக வீட்டுப் பணியாளர்களை கண்ணியக்குறைவாக நடத்தக்கூடாது.
3. வீட்டுப் பணியாளர்களை சொல்ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது.
4. ஆள் கடத்தல் மற்றும் கட்டாய வேலையில் ஈடுபடுத்துவோர் மீது தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.
5. வீட்டு ஊழியர்களை அடித்துத் துன்புறுத்துவது, காயங்கள் ஏற்படுத்துவது.
6. ஓப்பந்தத்தில் சொல்லப்படாத பணிகளை செய்யக்கூறி நிர்பந்தப்படுத்துவது.
ஏஜென்டுகள் மீதான சட்டங்கள்:
1. அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் (Recruitment Agencies) மட்டுமே வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை அமீரகத்திற்குள் அழைத்து வரலாம்.
2. எந்த ஒரு ஏஜென்ட் நிறுவனமோ அல்லது அவர்களால் அங்கீகாரம் பெற்றவர்களோ அமீரகத்தில் வீட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக எத்தகைய கமிஷனையும் பணியாளர்களிடமிருந்து பெறக்கூடாது.
3. பணி ஒப்பந்தக் பாலத்திற்கு முன் எந்த வீட்டுத் ஊழியர்களின் பணி ஒப்பந்தத்தையாவது ரத்து செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஊழியரை திருப்பி அனுப்புவதற்கான செலவை ஏஜென்டே ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மாற்று ஊழியரை வழங்க வேண்டும் அல்லது முதலாளியிடமிருந்து பெற்றுக் கொண்ட சேவைக்கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.
4. ஏஜென்டுகள் எப்போதும் தங்களால் பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர்களின் நலன் மீது அக்கறை செலுத்துவதுடன் அவர்கள் மீது வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறதிருப்பதையும் கண்காணித்து வரவேண்டும் எனக்கூறுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில் பணியாற்றும் வீட்டுப் பணியாளர் உரிமைகள் தொடர்பான புதிய சட்ட வரைவுகளை அமீரக தேசிய பெடரல் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்வழி வீட்டுப் பணியாளர்களுக்கு வாராந்திர விடுமுறை, ஒரு மாத சம்பளத்துடன் கூடிய வருட விடுமுறை, பாஸ்போர்ட், அடையாள அட்டைகள் போன்றவற்றை தங்களுடனேயே வைத்திருக்கும் உரிமைகள், முதலாளி தொழிலாளர் இடையே எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பன போன்றவற்றை உறுதி செய்துள்ளது.
அமீரக ஜனாதிபதி ஷேக் முஹம்மது கலீஃபா அவர்களின் இறுதி உத்தரவுக்காக காத்திருக்கும் இந்த சட்ட வரைவில் தினமும் 12 மணிநேர ஓய்வு நேரமும் அதிலும் 8 மணிநேர தொடர் ஓய்வும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர், முகவர் மற்றும் முதலாளி ஆகியோர் ஒரே ஒப்பந்தத்தின் இணைக்கப்பட்டுள்ளனர், 18 வயதிற்கு கீழுள்ள தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
புதிய வீட்டுப் பணியாளர் சட்டத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள்:
ஓப்பந்தக் கட்டுப்பாடுகள்:
1. வீட்டுப் பணியாளர் ஒருவர் தனது சொந்த நாட்டை விட்டு புறப்படுமுன் அவருக்கான பணி ஒப்பந்த நகலை ஏஜென்டுகளாக செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கட்டாயம் அவரிடம் வழங்க வேண்டும்.
2. அமீரக மனிதவளத்துறை அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பணி ஒப்பந்த ஷரத்துக்கள் எழுதப்பட வேண்டும்.
3. பணி ஒப்பந்த ஷரத்துக்கள் மதிக்கப்படாத பட்சத்தில் அதை முறிக்க தொழிலாளிக்கும், அவரது முதலாளிக்கும் முழு உரிமை உண்டு. அதிலிருந்தும் மேலெழும் பிரச்சனைகளை தொழிலாளர் நல நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டு ஊழியர்களின் உரிமைகளும் சலுகைகளும்:
1. ஒப்பந்தத்தில் கண்டுள்ள சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 10 ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டும்.
2. வீட்டுப் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
3. தினமும் 12 மணிநேர ஓய்வு, அதிலும் 8 மணிநேரம் தொந்தரவு இல்லா தொடர் ஓய்வும் தர வேண்டும்.
4. வருடந்தோறும் 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் செல்லும் உரிமையுள்ளது.
5. வீட்டுப் பணியாளர்களுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் செய்து தருவது முதலாளியின் கடமை.
6. அதேபோல் வருடந்தோறும் 30 நாட்கள் மருத்துவ காரணங்களுக்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
7. 2 வருடங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் சென்று வர ரிட்டர்ன் விமான டிக்கெட் தருவது முதலாளியின் கடமை.
8. வீட்டுப் பணியாளர்களுக்கு முறையான இருப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும்.
9. வீட்டுப் பணியாளர்களுக்கு முறையாக உணவு வழங்குவதும் முதலாளியின் கடமை.
10. வீட்டுப்பணியாளருக்கு பணிகள் தொடர்புடைய ஆடைகளை எடுத்துத் தருவதும் முதலாளியின் கடமை.
11. வீட்டுத் தொழிலாளர்கள் தங்களுடைய பாஸ்போர்ட், அடையாள அட்டை, எமிரேட்ஸ் ஐடி போன்றவற்றை தங்களுடனே வைத்திருக்க முழு உரிமை உண்டு.
12. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில் இருசாராரில் யாரும் முறையிட்டு 15 நாட்களுக்குள் சமாதான தீர்வை பெற்றுக் கொள்ளலாம். 2 வாரங்களுக்கு பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படவிட்டால் வழக்கு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும்.
13. வீட்டு தொழிலாளர்கள் தொடுக்கும் வழக்கிற்காக எத்தகைய நீதிமன்ற கட்டணங்களையும் செலுத்தத் தேவையில்லை, அவை மனிதாபிமானத்துடன் தள்ளுபடி செய்யப்படும்.
வீட்டு ஊழியர்கள் தொடர்பில் சட்டரீதியான தடைகள்:
1. 18 வயதிற்கு கீழுள்ளவர்கள் வீட்டு வேலைகளில் பணியாற்ற அனுமதியில்லை.
2. ஒருவருடைய இனம், நிறம், பாலினம், மதம், அரசியல் காரணங்களுக்காக வீட்டுப் பணியாளர்களை கண்ணியக்குறைவாக நடத்தக்கூடாது.
3. வீட்டுப் பணியாளர்களை சொல்ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது.
4. ஆள் கடத்தல் மற்றும் கட்டாய வேலையில் ஈடுபடுத்துவோர் மீது தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.
5. வீட்டு ஊழியர்களை அடித்துத் துன்புறுத்துவது, காயங்கள் ஏற்படுத்துவது.
6. ஓப்பந்தத்தில் சொல்லப்படாத பணிகளை செய்யக்கூறி நிர்பந்தப்படுத்துவது.
ஏஜென்டுகள் மீதான சட்டங்கள்:
1. அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் (Recruitment Agencies) மட்டுமே வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை அமீரகத்திற்குள் அழைத்து வரலாம்.
2. எந்த ஒரு ஏஜென்ட் நிறுவனமோ அல்லது அவர்களால் அங்கீகாரம் பெற்றவர்களோ அமீரகத்தில் வீட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக எத்தகைய கமிஷனையும் பணியாளர்களிடமிருந்து பெறக்கூடாது.
3. பணி ஒப்பந்தக் பாலத்திற்கு முன் எந்த வீட்டுத் ஊழியர்களின் பணி ஒப்பந்தத்தையாவது ரத்து செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஊழியரை திருப்பி அனுப்புவதற்கான செலவை ஏஜென்டே ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மாற்று ஊழியரை வழங்க வேண்டும் அல்லது முதலாளியிடமிருந்து பெற்றுக் கொண்ட சேவைக்கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.
4. ஏஜென்டுகள் எப்போதும் தங்களால் பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர்களின் நலன் மீது அக்கறை செலுத்துவதுடன் அவர்கள் மீது வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறதிருப்பதையும் கண்காணித்து வரவேண்டும் எனக்கூறுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.