.

Pages

Wednesday, June 7, 2017

கத்தார் ஆதரவு பதிவுகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் பாயும்: அமீரகம் எச்சரிக்கை !

அதிரை நியூஸ்: ஜூன் 07
கத்தார் நாட்டுடனான ராஜிய உறவுகளை சவுதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் துண்டித்துக் கொண்டது அறிந்ததே. இந்நடவடிக்கைக்கு ஆதரவை சில நாடுகள் தெரிவித்துள்ள நிலையில் சமூக ஊடகங்களில் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கத்தாருக்கு ஆதரவாகவும், அனுதாபத்துடனும் பகிரப்படும் பதிவுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரகம் எச்சரித்துள்ளது. கத்தார் மீதான அனுதாபப் பதிவுகள் அமீரகத்தின் இறையாண்மைக்கு எதிராகவும், உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் விளங்குவதாகவும் அமீரகம் கருதுகிறது.

அமீரகத்தின் நிலையை எதிர்த்து சமூக ஊடகங்கள் வாயிலாக அல்லது எழுத்து மூலமாக அல்லது கணொளி காட்சியாக அல்லது குரல் பதிவுகள் வழியாக கருத்துக்களை பரப்பினால் அவர்கள் மீது சுமார் 3 முதல் 15 ஆண்டுகால சிறை தண்டனையும், சுமார் 5 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என அமீரக அட்டார்னி ஜெனரல் கவுன்சலர் டாக்டர் ஹமாத் ஸைஃப் அல் ஸாம்ஸி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.