.

Pages

Friday, June 2, 2017

சவூதியில் 200 சிறைவாசிகளை விடுதலை செய்ய 15 மில்லியன் ரியால் நிதி திரட்டு!

அதிரை நியூஸ்: ஜூன் 02
சவுதியில் இப்புனிதமிகு ரமலானில் தனிப்பட்ட சில உரிமை மீறல் காரணங்களுக்காக  சிறைபட்டுள்ள சுமார் 200 சிறைவாசிகளை மீட்கும் நோக்குடன் சுமார் 15 மில்லியன் ரியாலை திரட்டியுள்ளது சவுதியில் தேசியளவில் செயல்படும் 'தரஹூம் கமிட்டி' (Tarahum Committee). கடந்த வருடம் இதுபோல் சுமார் 250 சிறைவாசிகளை விடுவித்துள்ளது தரஹும் கமிட்டி.

நீண்ட நாள் சிறையிலிருப்பவர்கள், நோயாளிகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து விடுதலைக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. சிறைவாசிகள் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் சுமார் 40 முதல் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யும்படி எதிர்த்தரப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு மீதத்தொகை சிறைவாசிகளின் சார்பாக தரஹூம் செலுத்துகின்றது.

சிறை விடுதலைக்குப் பின் அவர்களின் குடும்பத்தாருடன் கலந்தாலோசிக்கும் தரஹூம் கமிட்டி, அவர்களுக்கான வருவாய், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டுதல்களையும் பொருளாதார உதவிகளையும் வழங்குகின்றன. இந்த உதவித் திட்டங்களை ரமலானுக்குப் பின்னும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் செயல்படுத்துகின்றது தரஹூம் கமிட்டி.

இதுபோன்ற நல்ல திட்டங்களை நாமும் முன்மாதிரியாக கொள்ளலாமே.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.