.

Pages

Friday, June 2, 2017

புனிதமிகு மதினாவில் யாத்ரீகர்கள் வசதிக்காக விமான நிலையத்திலிருந்து 'ஷட்டில் பஸ்' சேவை துவக்கம் !

அதிரை நியூஸ்: ஜூன் 02
புனிதமிகு மதினா நகரில் அமைந்துள்ள 'மஸ்ஜிதுன் நபவி' பள்ளிவாசலுக்கு யாத்ரீகர்கள் சிரமமின்றி வந்து செல்ல மதினா விமான நிலையத்தில் 8வது பேருந்து நிலையம் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதினாவை சுற்றி 7 நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது 80 ஷட்டில் பேருந்துகளுடன் இயங்கும் இந்த சேவை 2012 ஆம் ஆண்டு ஆரம்பமாக 4 பஸ் நிலையங்களுடன் ஒரு சில பேருந்துகளுடன் புனிதமிகு ரமலான் மாதத்தில் மட்டும் இயங்கும் வகையில் துவக்கப்பட்டு தற்போது ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

புனிதமிகு ரமலான் மாதத்தின் முதல் 19 நாட்களும் மாலை 3 மணிக்கு துவங்கும் சேவை மஸ்ஜிதுன் நபவியில் இரவுத் தொழுகை (தராவிஹ்) நிறைவுறும் வரை இயங்கும். ரமலானின் கடைசி 10 தினங்களில் கியாமுல் லைல் எனப்படும் நள்ளிரவுத் தொழுகைகள் (தராவிஹ்) நிறைவுறும் வரை இயங்கப்படும்.

மதினா நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல 2 ரியால் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் மதினா விமான நிலைய சேவைக்கு மட்டும் 10 ரியால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 15 நிமிடத்தில் விமான நிலையத்திலிருந்து மஸ்ஜிதுன் நபவியை அடைய முடியும். மேலும், இந்த பேருந்துகளின் வருகை, புறப்பாடுகள் போன்ற நடமாட்டத்தை அறிந்து கொள்ள சிறப்பு செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.