.

Pages

Monday, June 5, 2017

முன்னாள் அதிரை சேர்மன் தலைமையில், 54 குடும்பங்களுக்கு ரூ.1.35 லட்சம் தீ விபத்து நிவாரணம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 05
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு
அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா.அண்ணாதுரை முன்னிலையில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ ரூ.1.35 லட்சம் நிவாரண உதவித்தொகையை திங்கட்கிழமை வழங்கினார்.

கடந்த மே 29ந் தேதி அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை,
அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் ஆகியோர் சம்பவ இடத்தை இன்று திங்கட்கிழமை பிற்பகல் நேரில் பார்வையிட்டு, பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும் தீ விபத்து நிவாரண உதவித்தொகை ரூ. 2,500 வீதம், மொத்தம் 54 குடும்பங்களுக்கு ரூ. 1.35 லட்சம் வழங்கினார்கள். மேலும், இந்த தீ விபத்தில் வீட்டை இழந்த திமுக மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் லண்டன் கோவிந்தராசு, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி.என்.ஆர் பிரகாஷ், திமுக பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில் குமார், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், மருதையன், வார்டு நிர்வாகிகள் நிஜாமுதீன், பசூல்கான், சைஃபுதீன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் கரையூர்தெரு சமூக ஆர்வலர்கள் முத்துக்குமரன், மாணிக்க முத்துசாமி ஆகியோர் நிவாரண உதவி வழங்கிய அனைவருக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர். அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு முன்னிலையில், 25 பேருடன் திமுகவில் புதிதாக இணைந்த அதிராம்பட்டினம் நூர் முஹம்மது மாவட்ட செயலாளரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

முன்னதாக, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், வண்டிப்பேட்டை பகுதியில் கூடியிருந்த 100 க்கும் அதிகமானோர் திமுக மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக அழைத்துச் சென்று ஈசிஆர் சாலை தனியார் மண்டபம் அருகில் உள்ள திமுக கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தனர்.
 
 
 
 
 
 
 

 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.