.

Pages

Monday, June 5, 2017

இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு !

அம்மா இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு மையப் பயிற்சி திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற 09.06.2017 தொடங்கப்படவுள்ளது.  இப்பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:
திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற 09.06.2017 முதல் அம்மா இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு மைய தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: 5வது மற்றும் அதற்கு மேல் (ஆண் பெண் இருபாலரும்)
வயது: 18 வயதிற்கு மேல் 40 வயது வரை
பயிற்சிக் காலம்: 3 மாதங்கள் (300 மணி நேரம்)
பயிற்சி தொடங்கும் நாள் : 09.06.2017
பயிற்சி நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை
உதவித்தொகை: ரூ.50- நாள் ஒன்றுக்கு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.