தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
மீனவ, மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (05.06.2017) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
குறை தீர் நாள் கூட்டத்தில் பூதலூர் வட்டம், பாலையப்பட்டி வடக்கு தெரு, காதாட்டிப்பட்டி காலனித் தெருவை சேர்ந்த திரு.கிஷோர்குமார் (வயது 16) என்பவர் குடிநீர் மோட்டார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமைக்காக அவரின் வாரிசுதாரரான அவரது தந்தை ராஜ்குமார் என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையும்,
கடந்த 2015-2016ம் ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மீனவ மாணவியர்களுக்கு மீன்வளத் துறை சார்பில் கல்வி உதவித்தொகை செல்வி சு.முத்ரா என்பவருக்கு முதலிடம் பெற்றமைக்காக ரூ.6,000த்திற்கான காசோலையும், இரண்டாமிடம் பெற்ற செல்வி க.நந்தினி என்பவருக்கு ரூ.4000த்திற்கான காசோலையும், மூன்றாடமிடம் பெற்ற செல்வி துர்காதேவி என்பவருக்கு ரூ.2000த்திற்கான காசோலையும், 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களான செல்வன் ச.சூர்யா என்பவர் முதலிடம் பெற்றமைக்காக ரூ.6,000த்திற்கான காசோலையும், இரண்டாமிடம் பெற்ற செல்வன் ச.சீனிவாசன் என்பவருக்கு ரூ.4000த்திற்கான காசோலையும், மூன்றாடமிடம் பெற்ற செல்வன் கா.பாஸ்கர் என்பவருக்கு ரூ.2000த்திற்கான காசோலையும்,
10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவரியாளர்களான செல்வி இ.பாரதி என்பவர் முதலிடம் பெற்றமைக்காக ரூ.3,000த்திற்கான காசோலையும், இரண்டாமிடம் பெற்ற செல்வி செ.அபர்னா என்பவருக்கு ரூ.2,000த்திற்கான காசோலையும், மூன்றாடமிடம் பெற்ற செல்வி செ.அஞ்சனா என்பவருக்கு ரூ.1,000த்திற்கான காசோலையும், 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவன் செல்வன் ஜெ.வினியரத்தின் என்பவருக்கு ரூ.3,000த்திற்கான காசோலையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
மேலும், கருணை அடிப்படையில் சத்துணவு மைய அமைப்பாளராக பணிபுரிந்து பணியிடையே காலமான த.மனோகரன் என்பவரின் வாரிசுதரரான அவரது மகள் செல்வி ம.சுருதிபிரியா என்பவருக்கு பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ரவி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆர்.தமிழ்செல்வன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மீனவ, மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (05.06.2017) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
குறை தீர் நாள் கூட்டத்தில் பூதலூர் வட்டம், பாலையப்பட்டி வடக்கு தெரு, காதாட்டிப்பட்டி காலனித் தெருவை சேர்ந்த திரு.கிஷோர்குமார் (வயது 16) என்பவர் குடிநீர் மோட்டார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமைக்காக அவரின் வாரிசுதாரரான அவரது தந்தை ராஜ்குமார் என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையும்,
கடந்த 2015-2016ம் ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மீனவ மாணவியர்களுக்கு மீன்வளத் துறை சார்பில் கல்வி உதவித்தொகை செல்வி சு.முத்ரா என்பவருக்கு முதலிடம் பெற்றமைக்காக ரூ.6,000த்திற்கான காசோலையும், இரண்டாமிடம் பெற்ற செல்வி க.நந்தினி என்பவருக்கு ரூ.4000த்திற்கான காசோலையும், மூன்றாடமிடம் பெற்ற செல்வி துர்காதேவி என்பவருக்கு ரூ.2000த்திற்கான காசோலையும், 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களான செல்வன் ச.சூர்யா என்பவர் முதலிடம் பெற்றமைக்காக ரூ.6,000த்திற்கான காசோலையும், இரண்டாமிடம் பெற்ற செல்வன் ச.சீனிவாசன் என்பவருக்கு ரூ.4000த்திற்கான காசோலையும், மூன்றாடமிடம் பெற்ற செல்வன் கா.பாஸ்கர் என்பவருக்கு ரூ.2000த்திற்கான காசோலையும்,
10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவரியாளர்களான செல்வி இ.பாரதி என்பவர் முதலிடம் பெற்றமைக்காக ரூ.3,000த்திற்கான காசோலையும், இரண்டாமிடம் பெற்ற செல்வி செ.அபர்னா என்பவருக்கு ரூ.2,000த்திற்கான காசோலையும், மூன்றாடமிடம் பெற்ற செல்வி செ.அஞ்சனா என்பவருக்கு ரூ.1,000த்திற்கான காசோலையும், 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவன் செல்வன் ஜெ.வினியரத்தின் என்பவருக்கு ரூ.3,000த்திற்கான காசோலையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
மேலும், கருணை அடிப்படையில் சத்துணவு மைய அமைப்பாளராக பணிபுரிந்து பணியிடையே காலமான த.மனோகரன் என்பவரின் வாரிசுதரரான அவரது மகள் செல்வி ம.சுருதிபிரியா என்பவருக்கு பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ரவி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆர்.தமிழ்செல்வன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.