.

Pages

Friday, June 2, 2017

அதிரை கரையூர் தெருவில் 63 குடும்பங்களுக்கு தீ விபத்து நிவாரணம் ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 63 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையிலும், மாநிலங்களவை உறுப்பினர்  ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையிலும், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நிவாரண உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.

தீ விபத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை 24 நபர்களுக்கும், வாக்காளர் அடையாள அட்டை 69 நபர்களுக்கும், வருமானச்சான்று 10 நபர்களுக்கும், சாதிச்சான்றிதழ் 11 நபர்களுக்கும், பட்டா மாறுதல் ஆணை 6 நபர்களுக்கும், பிறப்பு சான்றிதழ் 23 நபர்களுக்கும், பள்ளி மாணவ மாணவியர்களின் மதிப்பெண் பட்டியல் 15 மாணவ மாணவியர்களுக்கும், மாற்றுச்சான்றிதழ் 14 மாணவ மாணவியர்களுக்கும், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் 46 நபர்களுக்கும், ஏடிஎம் கார்டு 3 நபர்களுக்கும், பான் கார்டு 1 நபருக்கும், ஓட்டுநர் உரிமம் அட்டை 5 நபர்களுக்கும், பாஸ்போர்ட் 4 நபர்களுக்கும், மீனவர் அடையாள அட்டை 31 நபர்களுக்கும், பயோ மெட்ரிக் கார்டு 10 நபர்களுக்கும், 5 நபர்களுக்கு மீனவர் வலையும், 60 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாடப்புத்தகம், குறிப்பேடு, சீருடை, புத்தகப்பை ஆகியவற்றை  வழங்கி வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது;

தமிழக முதல்வர் அவர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதன்படி 29.05.2017 தீ விபத்து ஏற்பட்ட அன்றே அரசின் நிவாரண உதவித் தொகை, தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.5000,   2 செட் வேட்டி, சேலை, மண்ணென்ணை, 25 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் அவர்களிடம் தெரிவித்து வீடு கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு அதிக அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.  தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.