.

Pages

Monday, June 12, 2017

கின்னஸ் சாதனை நிகழ்த்திய உலகின் மிகப்பெரிய பணம் துபாயில் காட்சிக்கு வைப்பு !

அதிரை நியூஸ்: ஜூன் 12
பிலிப்பைன்ஸ் நாட்டின் சென்ட்ரல் பேங்க் 1998 ஆம் ஆண்டு தமது நாட்டை 300 வருடங்கள் ஆண்ட ஸ்பெயின் ஆட்சியாளர்களிடமிருந்து போராடி சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டை போற்றும் வகையில் சிறப்புப் பதிப்பாக 1 லட்சம் பெசோக்கள் (Philippine Pesos) (திர்ஹம் 9,000க்கு நிகரான) மதிப்புடைய வெறும் 1,000 நோட்டுக்களை மட்டும் அச்சிட்டு (Special Edition) வெளியிட்டிருந்தது. இந்த நோட்டை உலகின் பெரிய சைஸ் நோட்டாக அங்கீகரித்து கின்னஸ் நிறுவனம் சாதனைச் சான்றிதழையும் வழங்கியிருந்தது.

35.6 cm மற்றும் 21.6 cm அளவில் A4 சைஸ் பேப்பரை விட சற்றே பெரியளவில் அமைந்திருந்த பணம் அனைத்தையும் தலா 1.80 லட்சம் பெசொக்களுக்கு (திர்ஹம் 15,500) பழைய நோட்டு சேகரிப்பாளர்களிடம் விற்றும்விட்டது பிலிப்பைன்ஸ் சென்ட்ரல் பேங்க் அதனால் பொதுமக்களுக்கு இப்படி ஒரு சிறப்பு நோட்டு வெளியிடப்பட்டதே தெரியாமல் போயிற்று.

இந்த சிறப்பு பெரிய சைஸ் நோட்டை விற்க விரும்பாதவர்களிடம் 999 நோட்டுக்கள் தங்கிவிட ஒரேயொரு நோட்டு மட்டும் தற்போது பிலிப்பைன்ஸ் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் துபையில் பொதுமக்கள் பார்வைக்காக Numisbing எனும் ஒரு தனியார் பழைய நோட்டுக்கள் சேகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டின் இன்றைய மதிப்பான 145,000 திர்ஹத்தை செலுத்தி ஆர்வமுள்ள யாரும் வாங்கலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

1890 ஆம் ஆண்டு ஸ்பெயின் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்ற புரட்சியை குறிக்கும் படம் இடம் பெற்றுள்ள இந்த ஒரிஜினல் 1 லட்சம் பெசோ பணம் மற்றும் அதற்காக வழங்கப்பட்ட ஒரிஜினல் கின்னஸ் சர்ட்டிபிகேட் மற்றும் பிலிப்பைன்ஸ் சென்ட்ரல் பேங்க் சர்ட்டிபிகேட் முன்பாக
நின்று பலரும் குறிப்பாக பிலிப்பைனிக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

மேலும் உலகின் 2வது பெரிய நோட்டான, சீனாவின் மிங் அரச வம்சத்தால் (Chinese Ming Dynasty) வெளியிடப்பட்ட நோட்டும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரியில் சென்று பார்க்கவும்.

The note is on show at the Numisbing showroom in Deira on Al Maktoum Road, from 10am to 7pm, Sunday to Thursday.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.