.

Pages

Tuesday, June 13, 2017

பாம்பு கணவனை கடிக்க ! கணவன் மனைவியை கடிக்க !! நேசமழையை பொழிஞ்சிட்டாரு!!

அதிரை நியூஸ்: ஜூன் 13
இந்தியாவின் பீஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவிலிருந்த 90 கி.மீ தூரத்தில் உள்ள சமஸ்டிபூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் பெயர் பிர்சிங்பூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய்.

சங்கர் ராய் திங்கள் இரவு நன்கு தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு தீண்டியுள்ளது. கண்விழித்தவருக்கு தான் இனி பிழைக்க மாட்டோம் என உணர்ந்துள்ளார். உடனே எடுத்தார் பாருங்கள் ஒரு முடிவு, தன் மனைவி அமீரி தேவியிடம் உணர்ச்சி மேலிட்டவறாக 'உன்னை மிகவும் நேசிக்கின்றேன், வா நாம் இருவரும் இணைந்தே சாவோம்' எனக்கூறியவறாக அவரது மனைவியின் கையை கடித்துள்ளார். என்னே! ஒரு பாசம்.

பாம்பிடம் கடிபட்ட கணவனும், கணவனிடம் கடிபட்ட மனைவியும் மயங்கிக் கிடாப்பதை பார்த்தவர்கள் இருவரையும் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணவன் மட்டும் இறந்துவிட மனைவி பிழைத்துக் கொண்டார்.

கணவனின் கடைசி ஆசை நிறைவேறவில்லை என்பதே தற்போது டாக் ஆப் த குளோபல் வில்லேஜ், வெளிநாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் இதை செய்தியாக வெளியிடுகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.