.

Pages

Tuesday, June 13, 2017

துபாயில் நவீன வசதியுடன் கூடிய வாட்டர் பிரண்ட் மீன் மார்க்கெட் திறப்பு !

அதிரை நியூஸ்: ஜூன் 13
துபையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வாட்டர் பிரண்ட் மீன் மார்க்கெட் ஞாயிறு முதல் செயல்படத் துவங்கியது. தற்போது மீன் மார்க்கெட் மட்டுமே பழைய தேரா மீன் மார்க்கெட்டில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காய்கறி பழங்கள் மற்றும் மாமிசங்கள் விற்கும் கடைகள் ரமலான் மாதம் வரை மட்டும் பழைய இடத்திலேயே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் புதிய மீன் மார்க்கெட்டில் தேனீர் நிலையம், உணவகம், சூப்பர் மார்க்கெட் மற்றும் இதர சில்லறை விற்பனை நிலையங்களும் துவங்கப்படவுள்ளன.

புதிய மீன் மார்க்கெட் முற்றிலும் நவீன வசதிகளுடன் முழுமையாக ஏசி வசதியுடன் துர்நாற்றம் இன்றியும் மூடப்பட்ட கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது மேலும் மீன் மார்க்கெட் நிர்வாகத்தால் டிஜிட்டல் எலக்ட்ரானிக் தராசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பழைய தேரா மீன் மார்க்கெட்டை விட இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது வாடகை என்றாலும் தேவையான ஐஸ், ரெப்ரிஜிரேட்டர், ஸ்டோரேஜ் வசதி, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் மீன் மார்க்கெட் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. மீனை சுத்தம் செய்யும் பகுதியை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதால் இனி மீன்களை சுத்தம் செய்ய கிலோவுக்கு 1 திர்ஹத்திற்கு பதில் 1.50 திர்ஹம் வசூலிக்கப்படும். அதேவேளை இரால், நண்டு, கணவாய் போன்றவைகளை சுத்தம் செய்ய பழைய கட்டணமான 3 திர்ஹம் மட்டுமே வசூலிக்கப்படும்.

அதேபோல் பெரிய மீன்களை வெட்டி சில்லறையாக விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது, எந்த ஒரு மீனையும் முழுமையாகவே வாங்க வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.