.

Pages

Monday, June 12, 2017

தங்கம் பதக்கம் வென்ற பட்டுக்கோட்டை மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாநில அளவில் பளுதூக்கும் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில்
தங்கம் பதக்கம் பெற்ற செல்வி லோகபிரியாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (12.06.2017) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை,  வீட்டு மனைப்பட்டா,  கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
குறை தீர் நாள் கூட்டத்தில் உடுமலைப்பேட்டையில் கடந்த மாதம் நடைப்பெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில்  57 கிலோ எடைபிரிவில் 325 கிலோ எடையை தூக்கி அதிக புள்ளிகளை பெற்று, முதலிடம் பெற்ற  தமிழ்நாடு இரும்பு பெண்மணி என்ற பட்டத்தையும் தங்க பதக்கத்தையும், அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 57 கிலோ எடைபிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பட்டுக்கோட்டையை சேர்ந்த லோக பிரியா என்ற மாணவி பதக்கத்தையும், இரும்பு பெண்மணி என்ற பட்டத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.  மேலும், செப்டம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.  இப்போட்டியில் வெற்றி பெற மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வாழ்த்தி பாராட்டினை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.