.

Pages

Monday, June 12, 2017

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு பேரணி (படங்கள்)

தஞ்சாவூரில் தொழிலாளர் துறையின் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து
சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு
விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை (12.6.2017) இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு, கீழராஜ வீதி வழியாக அரசர் மேல்நிலைப்பள்ளியில் சென்றடைந்தது. திரளான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், குழந்தை தொழிலாளர் ஒழித்தல் தொடர்பான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரயில் நிலையத்தில் தொழிலாளர் துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொழிலாளர் முறை அகற்றுதல் தொடர்பாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

வாகனங்களில் குழந்தை தொழிலாளர் அகற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு ஒட்டுவில்லையினை வாகன உரிமையாளரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது;
குழந்தை மற்றும் வளரினம் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986ன்படி குழந்தைகளை வேலைக்கமர்த்துவோர்கள் மீது ரூ.50 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிப்பதற்கு சட்டத்;தில் வழிவகை உள்ளது எனவும்,  தஞ்சாவூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக திகழ அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதல் தொடர்பான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஏற்றக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், முதன்மைக் கல்வி அலுவலர் சுபாசினி, தொழிலாளர் ஆய்வாளர் பாஸ்கரன், மாவட்ட கல்வி அலுவலர் சின்னையன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரஸ்வதி, சைல்டுலைன்இயக்குநர் ஆனந்த் ஜெரால்டு செபஸ்டின், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஞானராஜ், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.