.

Pages

Monday, June 12, 2017

அதிரை பைத்துல்மால் குவைத் கிளை இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் மாதாந்திரக் கூட்டம் !

அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 09/06/2017  வெள்ளிக்கிழமை மாலை BOLLYWOOD RESTAURANT ஆடிட்டோரியத்தில் அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
உரை        : ஜெய்னுல் ஹுசைன் (தலைவர்)
நிகழ்ச்சி தொகுப்பு   : கமறுஜமான் (துணைத் தலைவர்)
சிறப்பு விருந்தினர் :  அப்துல் ரஷீது (Jubail – Saudi Arabia)

1) அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் இஃப்தார் நிகழ்ச்சியும் மாதாந்திர கூட்டமும் சேர்த்து இனிதே சிறப்பாக நடைபெற்றது.

2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதரர்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்.

3) சகோ ஜெய்னுல் ஹுசைன் தனது உரையில் ஜகாத்தை  கணக்கிடுவதின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பைத்துல்மால் மூலம் ஏழைகளுக்கு பங்கிடவேண்டும் என்பதையும், இப்புனித மாதத்தில் ஸதக்காவை வாரி வழங்கவேண்டும் என்பதையும், ஸதக்கத்துல் பித்ர் நபருக்கு ஒரு தினார் வீதம் வழங்கும்படியும்,  நம் வங்கி கணக்கில் வந்துவிழும் வட்டியை என்ன செய்வது என்பதையும்  விளக்கமாக விவரித்தார்.

4) மேலும், அதிரை பைத்துல்மாலின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அதற்கு நம் ஆதரவின் அவசியத்தையும் விளக்கினார்.

5) இக்கூட்டத்தில் மேலும் சில நிர்வாகிகள் சேர்க்கப்பட்டனர்.

6) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM குவைத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 7-ம் தேதி JULY 2017 வெள்ளிகிழமை மாலை 5 மணிக்கு சால்மியாவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால், குவைத் கிளை
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.