.

Pages

Sunday, June 4, 2017

பட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு !

கோப்புப்படம்
பட்டுக்கோட்டை, ஜூன் 04
பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம்:
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அறந்தாங்கி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பழனியப்பன் தெரு பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், தலையாரி தெரு சிட்டி யூனியன் வங்கி அருகில், அறந்தாங்கி சாலை முக்கம், பெருமாள் கோயில் ஆற்றுப்பாலம் ஆகிய இடங்களில் மட்டும் நின்று செல்ல வேண்டும்.

இதேபோல தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், சிட்டி யூனியன் வங்கி அருகில், அறந்தாங்கி சாலை முக்கம், அல்லா கோயில் தெரு புளிய மரத்தடி, சாமியார் மடம் ஆகிய நிறுத்தங்களிலும், முத்துப்பேட்டை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், நீதி மன்றம், மைனர் பங்களா, கைகாட்டி, தாலுக்கா அலுவலகம் ஆகிய நிறுத்தங்களிலும், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், சிட்டி யூனியன் வங்கி அருகில், அறந்தாங்கி சாலை முக்கம், லட்சத்தோப்பு இரட்டை சாலை ஆகிய நிறுத்தங்களிலும் மட்டும் நின்று செல்ல வேண்டும்.

தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்களைத் தவிர வேறு இடங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கினால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதுடன் அவர் மீது வழக்கும் தொடரப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.