தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம், ஜாம்புவானோடை ஊராட்சி, மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், தமிழரசி. இத்தம்பதியின் மகள் கலா ( 26 ). எம்.எஸ்.சி பட்டதாரி, இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு ஊராட்சி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஸ்டாலினுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து வைக்கப்பட்டது. இத்தம்பதிக்கு 2-1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஸ்டாலின் துபாய் நாட்டில் பணியாற்றி வருகிறார். கலா தனது மாமனார் கணேசன், மாமியார் சந்திரா ஆகியோருடன் தொக்காளிக்காடு வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் கலா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் கலா பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 3 வருடத்தில் கலா இறந்து போனதால், அவர் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தாரா? என்பது குறித்து பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.