.

Pages

Sunday, June 4, 2017

CBSE பத்தாம் வகுப்பு தேர்வில், பிரிலியண்ட் பள்ளி 2 ஆம் ஆண்டாக 100% தேர்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூன் 04
பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ மத்திய அரசு பொதுத்தேர்வில் அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2016-2017 ஆம் கல்வியாண்டில் பள்ளி சார்பில் மொத்தம் 7 பேர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் மாணவன் நாகமணி 10க்கு 10 மதிப்பெண்கள் பெற்று ஏ 1 கிரேடு தரம்பெற்று பள்ளியளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவன் சேதுபதி 10க்கு 9.6, அர்ஜீன் 10க்கு 9.4 ஆகிய மதிப்பெண்கள் பெற்று ஏ 1 கிரேடு பெற்றுள்ளனர். மாணவர்கள் மாணிக்க பிரகாஷ் 10க்கு 8.2, யோகேஸ்வரன் 10க்கு 8.2, அமர்நாத் 10க்கு 7.8 மற்றும் அஃப்சர் 10க்கு 7.4 பெற்று வெற்றிப் பெற்றுள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவர்கள், கல்வி போதித்த பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன், முதல்வர் ஆர். ஈஸ்வரன், மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பள்ளியில் தற்போது +1 சேர்க்கை  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.