இன்று ஜூன் ந் தேதி திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 94 வது பிறந்த தினத்தையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் சார்பில் 5 இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டு, இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி தலைமை வகித்தார். அக்கட்சியின் அவைத் தலைவர் ஜே. சாகுல் ஹமீது, பா.கு பகுருதீன் ஆகியோர் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். இதில் அக்கட்சி அலுவலகம், பேருந்து நிலையம், சால்ட் லேன், வண்டிப்பேட்டை, கல்லூரி முக்கம் ஆகிய 5 இடங்களில் திமுக கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா, முன்னாள் மாவட்டச் துணைச் செயலாளர் இராமச்சந்திரன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திமுக அதிரை பேரூர் துணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதிகள் முல்லை மதி, வீரப்பன், துணைச்செயலர் தில்லை நாதன், வார்டு நிர்வாகிகள் முத்துராமன், சேக்தாவூது, வரிசை முகம்மது, ராஜதுரை, எம்.செல்வராஜ், கோடி நாகராஜ், ஜே. பாலமுருகன், இராமநாதன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
இன்று ஜூன் ந் தேதி திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 94 வது பிறந்த தினத்தையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் சார்பில் 5 இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டு, இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இன்று பிறந்தநாள் கானும் தளபதியின் அப்பா,மு,கருணாநிதி அவர்களுக்கு இந்தியயூனியன் முஸ்லிம்லீக் அதிரை கிளை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கின்றேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete