.

Pages

Monday, March 12, 2018

சவுதியில் அரசுத் துறையில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களை நீக்கும் திட்டம் முடங்கியது!

அதிரை நியூஸ்: மார்ச் 12
சவுதியில் சுகாதாரம் மற்றும் உயர்கல்வித் துறையில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களை நீக்கும் திட்டம் முடங்கியது.

சவுதியில் வெளிநாட்டவர்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் சவுதிக்காரர்களை நியமிக்கும் பணிகள் வெகுவேகமாக நடந்து வருவது அறிந்ததே. இதன்படி தற்போதுள்ள சவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புக்களில் சவுதியைச'சேர்ந்த 702,193 ஆண்களும், 471,242 பெண்களும் என மொத்தம் 1,173,435 பேர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த 32,336 ஆண்களும் 31,310 பெண்களும் என மொத்தம் 63,646 அரசுத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதிலிருந்து 2020 ஆம் ஆண்டிற்குள் சுமார் 28,000 பேரை நீக்கிவிட்டு அந்த இடங்களில் சவுதிக்காரர்களை பணியில் அமர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

சுகாதாரத் துறை எனும் மருத்துவம் சார் பணிகளிலும், உயர் கல்வித்துறையிலும் போதுமான சவுதியர்கள் இன்னும் தேவையான திறன் பெறாததால் இந்தப் பணிகளில் வெளிநாட்டவர்களை நீக்கும் போக்கு தடைபட்டுள்ளது. இந்நிலை மாற இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.