அதிராம்பட்டினம், ஜன.04
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், இளம் அறிவியல் விஞ்ஞானிகள் திட்ட முகாம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த டிச.24 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாமில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று வருகின்றனர். இதில், கணிதம், கணினி, இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் குறித்த பாடங்கள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு அறிவியல் ஆய்வக களப்பயணத்தை மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.
இதில், கல்லூரி புல முதல்வர் இளங்கோவன் இயந்திரங்களின் செயல்முறை, இயக்கும் முறை, கணினி இயக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும், பொறியியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே எடுத்துரைத்தார். பின்னர், கல்லூரியில் உள்ள மெக்கானிக்கல் ஆய்வகம், இயற்பியல், வேதியியல், கணினி, மின்மோட்டார், சிவில் ஆய்வகங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஏற்பாடுகளை, திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. குமாரசாமி, திட்ட அமைப்பாளர் பேராசிரியர் அ.அம்சத், துணை ஒருங்கிணைப்பாளர் கே. முத்துக்குமரவேல் ஆகியோர் செய்து இருந்தனர்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், இளம் அறிவியல் விஞ்ஞானிகள் திட்ட முகாம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த டிச.24 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாமில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று வருகின்றனர். இதில், கணிதம், கணினி, இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் குறித்த பாடங்கள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு அறிவியல் ஆய்வக களப்பயணத்தை மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.