.

Pages

Saturday, January 5, 2019

வளைகுடா நாடுகளிலிருந்து இறந்த உடல்களை ஏர் இந்தியாவில் சுமந்து செல்ல புதிய கட்டணம் நிர்ணயம்!

அதிரை நியூஸ்: ஜன. 05
அமீரகம் உள்ளிட்ட வளைகுடா அரபு நாடுகளிலிருந்து இறந்து போனவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு செல்ல நாடுகளுக்கு ஏற்றவாறு ஒரே சீரான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணவிகிதம் இன்றுமுதல் உடனடியாக அமுலுக்கு வருகின்றது.

பழைய கட்டணங்கள் ஜனாஸா பெட்டிகளின் அளவு மற்றும் எடைகளுக்கு ஏற்ப முன்பு வசூலிக்கப்பட்டு வந்ததுடன் தென் இந்தியாவுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் கட்டணம் கூடுதலாகவும், வட இந்தியா செல்லும் விமானங்களில் கட்டணம் குறைவாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது இனி இந்தியா முழுமைக்கும் ஒரே சீரான கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண உயர்வால் தென்னிந்தியர்கள் சுமார் 200 முதல் 300 திர்ஹம் வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்றாலும் தற்போது அதிகம் பாதிக்கப்படுவது வட இந்தியர்களே.

புதிய கட்டணப்படி, அமீரகத்திலிருந்து பெரியவர்களின் உடல்களை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்ளில் கொண்டு செல்ல 1500 திர்ஹமும், 12 வயதிற்குட்பட்ட சிறார்களின் உடல்களை கொண்டு செல்ல 750 திர்ஹமும் புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றாலும் கதியற்ற ஏழைகளின் உடல்களை இந்திய தூதரகத்தின் சார்பில் கொண்டு செல்லப்படும் என துபையிலுள்ள இந்திய துணைத்தூதரகம் உறுதியளித்துள்ளது.

வளைகுடா நாடுகளிலிருந்து ஜனாஸாக்களை கொண்டு செல்லும் புதிய கட்டண விபரங்கள்:
ஐக்கிய அரபு அமீரகம் - 1,500 திர்ஹம்
சவுதி அரேபியா - 2,200 ரியால்
குவைத் - 175 குவைத் தினார்
பஹ்ரைன் - 225 தினார்
ஓமன் - 160 ஓமனி ரியால்

2018 ஆம் ஆண்டில் மட்டும் துபையில் சுமார் 1,400 இந்தியர்களின் இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டன, இதில் சுமார் 70% உடல்கள் இறுதி சடங்கிற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுள்ளன மீதம் 30% அமீரகத்திலேயே இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என இந்திய துணைத்தூதர் விபுல் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.