.

Pages

Sunday, March 31, 2019

காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை ஆற்றினார். முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் சிறப்புரை வழங்கினார்.

கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் என். ஜெயவீரன் வரவேற்றுப்பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், எம். நாசர், கல்லூரிப் பேராசிரியர்கள் ஜெ. சொக்கலிங்கம், எஸ்.பி கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில், கல்லூரி முன்னாள் மாணவர்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி கணினி அறிவியல் துறையில் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியினை, பேராசிரியைகள் ஏ.சித்தி ஜாபிரா, எஸ்.சுபாதேவி ஆகியோர் தொகுத்து வழங்கினார். முடிவில் பேராசிரியர் ஏ.ஷேக் அப்துல் காதர் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Saturday, March 30, 2019

மரண அறிவிப்பு ~ செ.ந செய்யது இப்ராஹீம் (வயது 75)

அதிரை நியூஸ்: மார்ச் 30
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந முகமது உஸ்மான் அவர்களின் மகனும், மர்ஹூம் மவ்லவி அன்சாரி, முகமது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், ஜெய்லானி, முகமது ஹசன் ஆகியோரின் மாமனாருமாகிய செ.ந செய்யது இப்ராஹீம் (வயது 75) அவர்கள் இன்று வாய்க்கால் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-03-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

சவுதி ஜித்தாவில் அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC) அணி சாம்பியன் (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 30
சவுதி ஜித்தா தமிழ் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி ஜித்தா STC மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இதில், ஜித்தா வாழ் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய மன்சூர் & மொசைட் (M & M), ஜித்தா தமிழ் ரெட் புல்ஸ் (JTB), 777CC, அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC), தமிழ் சூப்பர் நைட்ஸ், ஜித்தா தமிழ் எல்லோ புல்ஸ் (TSK) ஆகிய 6 அணிகள் விளையாடினர்.

நேற்று வெள்ளிக்கிழமை நடந்த பகல், இரவு நேர அரை இறுதி ஆட்டத்தில், அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC) அணி, மன்சூர் & மொசைட் அணிகள்  விளையாடின. முதலில் பேட் செய்த AFCC, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 94 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மன்சூர் & மொசைட் அணியினர் 43 ரன்கள் மட்டுமே எடுத்து இறுதி போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.

பின்னர் நடந்த இறுதி போட்டியில், அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC), ஜித்தா தமிழ் எல்லோ புல்ஸ் (TSK) ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த AFCC அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 75 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மன்சூர் & மொசைட் அணியினர் 60 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC) அணிக்கு சுழற்கோப்பை பரிசு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த சிறந்த மட்டையாளர் இப்ராஹீம், தொடர் நாயகன் இஸ்மாயில் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானத் தமிழர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, சவுதி ஜித்தா தமிழ் பிரிமீயர் லீக் அமைப்பினர் செய்திருந்தனர்.
 
 
 
 

Friday, March 29, 2019

திடீர் திருவிழா கடையான அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

 அதிராம்பட்டினம், மார்ச் 29
இன்று அதிரை ரயில் நிலையம் வழியாக அதிவேக ரயில் ஓட்ட சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையிலிருந்து ஆண்களும் இளைஞர்களும் அதிரை ரயில் நிலையத்திற்கு படையெடுத்து வந்த நிலையில் இன்று மாலையிலிருந்து பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என சாரைசாரையாக ஆட்டோக்கள், கார்கள், மோட்டார் பைக்குகள், சைக்கிள்கள் என கிடைத்த வாகனங்களில் திரண்டு வந்து அதிரை ரயில் நிலையத்தை ஒரு திருவிழா கொண்ட்டாட்டம் நடைபெறும் இடம்போல் மாற்றியுள்ளனர். அனைவரின் முகங்களிலும் பிரிந்த குழந்தையை மீண்டும் சந்திக்க வந்த மகிழ்ச்சி நிலவுகிறது.

தகவல்: அதிரை அமீன்