.

Pages

Sunday, March 17, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்று, கல்வி அறிக்கை, பட்டமளிப்பு உறுதிமொழி வாசித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் க. துரையரசன் கலந்துகொண்டு 375 இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்திப் பேசியது;
'பெண்கள் இல்லையென்றால் இந்த உலகம் இல்லை. ஒரு ஆடவனுக்கு கொடுக்கும் கல்வி தனி மனிதன் சார்ந்த கல்வியாக இருக்கும். ஆனால், பெண்கள் பெறக்கூடிய கல்வி என்பது அது ஒரு குடும்பம் சார்ந்த கல்வியாக இருக்கும். பெண்கள் பெருமைக்குரியவர்கள். படிப்பது, பட்டங்கள் பெறுவது வாழ்வில் ஒரு படி நிலை வளர்ச்சி. உங்களது வாழ்வில் அடுத்த வளர்ச்சி நிலைகள் இன்னும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பெற்று உங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். கல்வி மூலம் நீங்கள் பெரும் நன்மைகளில் சிலவற்றை இந்த சமூகம் பயன்பெரும் வகையில் திருப்பி அளிக்க வேண்டும்' என்றார்.

விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
  

 





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.