.

Pages

Tuesday, March 26, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியர் தகுதித் தேர்வு பயிலரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 26
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத்துறை சார்பில் பேராசிரியர் தகுதித் தேர்வு (SET / CSIR - NET) குறித்து ஒரு நாள் சிறப்பு பயிலரங்கம் கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கணிதத் துறை தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எஸ். ஜெ. அபுல் ஹசன், துணை முதல்வர் எம். நாசர், கணிதத்துறை பேராசிரியர் டி. லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பயிலரங்கில் திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் என். பிரகாஷ் கலந்து கொண்டு பேராசிரியர் தகுதித் தேர்வு குறித்து பயிற்சியளித்து பேசினார். இதில் 150 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.  அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிலரங்கு ஏற்பாட்டினை கல்லூரி கணிதத்துறை பேராசியர்கள் என்.வீரபாண்டியன், எஸ். அப்பாஸ், எம். சுமதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.