.

Pages

Friday, March 22, 2019

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம், நாடாளுமன்ற தேர்தல் 2019 மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பதும் மற்றும் 100 சதவிகிதம் வாக்களிப்பதும் குறித்து தஞ்சாவூர் மாநகராட்சின் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவ10ர் மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சியின் சார்பில் நேர்மையாக 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இரயிலடியிலிருந்து ஆற்றுப்பாலம் வரை நடைபெற்று வருகிறது.  இது அனைவருக்குமான தேர்தல். இத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் கலந்து கொண்டு வாக்களித்திட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலாச்சார அடிப்படையில் பேராவூரணி பகுதிகளில் தேர்தல் மொய்விருந்து நிகழ்ச்சி நடத்திடவும் பொதுமக்களிடமிருந்து தேர்தல் ஆணையத்திற்கு மொய்யாக வாக்குகளை பெற்றிடவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலோர மீனவ கிராமங்களில் மீனர்களிடையே பாய்மர படகு போட்டி நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஏப்ரல் 18 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.  இதில் பொதுமக்கள் தேர்தல் திருவிழாவில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிட ஏப்ரல் 18ம் தேதி தங்கள் வாக்கினை நேர்மையாகவும், 100 சதவிகிதம் வாக்களித்திட கேட்டுக்கொள்கிறேன்.  பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், நேரடி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். (மைக்ரோ) நுண்பார்வையாளர் மூலம் கண்காணிப்பு செய்யபடும். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநகராட்சி ஊழியர்களின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பதாதைகளை ஏந்தி இரு சக்கரவாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே விநியோகித்தார்.  மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆ.அண்ணாதுரை அறிவுறித்தினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்தரன், மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜகுமரன், நகர்நல அலுவலர் டாக்டர்.நமச்சிவாயம், நகரஅமைப்பு அலுவலர் தயாநிதி மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.