.

Pages

Sunday, March 10, 2019

திருவாரூர் ~ பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் மார்ச் இறுதிக்குள் ரயில் சேவை: தென்னக ரயில்வே அதிகாரி தகவல்!

அதிரை நியூஸ்: மார்ச் 10
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் மார்ச் மாத இறுதிக்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஏ.கே. மிஸ்ரா தெரிவித்தார்.

திருவாரூர்- பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் மார்ச் மாத இறுதிக்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஏ.கே. மிஸ்ரா தெரிவித்தார்.

திருவாரூரில் அகல ரயில் பாதை பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: 
திருவாரூர்- திருத்துறைப்பூண்டி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த பாதையில் இம்மாத (மார்ச்) இறுதிக்குள் ரயில் சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளது. திருவாரூரிலிருந்து திருச்சிக்கு காலை 8 மணிக்கு முன்பும், மாலையில் 4.30 மணிக்கு பின்பும் ரயில் சேவை வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்துள்ளன. இதேபோல், பயணிகளின் வரத்தைப் பொருத்து வாரம் ஒருமுறை வரும் கொல்லம் ரயிலை, தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, பட்டுக்கோட்டையிலிருந்து ஆய்வைத் தொடங்கிய அவர், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுவை முடித்துக்கொண்டு, திருவாரூருக்கு வந்தார்.  இந்த ஆய்வின்போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஏ. உதயகுமார் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.