அதிராம்பட்டினம், மார்ச் 24
திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் வெற்றிபெற நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தனர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமையில், எம்.எம்.எஸ் குடும்பத்தார்.
தமாகா அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமையில், எம்.எம்.எஸ் தாஜுதீன், எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், எம்.எம்.எஸ் அன்வர் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்ட எம்.எம்.எஸ் குடும்பத்தார், எம்.எம்.எஸ் வாடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் முன்னிலையில், திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் வெற்றிபெற நிபந்தனையின்றி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.
அப்போது, திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம், திமுக அதிரை பேரூர் இணைச்செயலாளர் ஏ.எம் அன்சர் கான், பொருளாளர் கோடி. முதலி, மாவட்ட பிரதிநிதி எம்.பகுருதீன், ஒன்றியப் பிரதிநிதி முல்லை மதி, ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் இத்ரீஸ் அகமது, முன்னாள் கவுன்சிலர் செய்யது முகமது, காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், தலைவர் எஸ்.கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், பொருளாளர் ஏ.ஷேக் அப்துல்லா, இணைச்செயலாளர் எம்.கே.எம் அபூ பக்கர், மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, தமுமுக / மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், முகமது சேக்காதியார், ஹக்கீம், இந்திய கம்யூனிஸ்ட் பசீர் அகமது உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் M.M.S குடும்பத்தார் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வந்தனர். பின்னர், காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழ்மாநில காங்கிரஸ் பிரிந்த சென்ற போது, அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமாகாவில் இணைந்து அதில் சிலர் நிர்வாகிகளாக பொறுப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.