.

Pages

Friday, March 1, 2019

அரசுப்பள்ளிகளுக்கு கல்விச் சீர்வரிசை வழங்கும் விழா (படங்கள்)

பேராவூரணி மார்ச்.01-
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கல்விச் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்-காடு
பேராவூரணியை அடுத்த பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சு.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பா.நிர்மலா வரவேற்றார். கிராமக் கல்விக்குழு தலைவர் இந்திரா கணேசன், கல்வியாளர்கள்
ஆர்.பி.ராஜேந்திரன், நீலகண்டன், பாண்டியராஜன், அய்யாச்சாமி, முன்னாள் மாணவர் பிரதீஸ், ஆசிரியர் பயிற்றுனர் ரகுராம் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சேகர் நன்றி கூறினார். கிராம பொதுமக்கள் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் பள்ளிக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

பெரியதெற்குக்காடு 
பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், முத்துவேல், அன்பழகன், அம்பிகாபதி, பள்ளி மேலாண்மைக்குழு ஜெயா உள்ளிட்டோர் கலந்துகொண்டு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை பள்ளிக்கு வழங்கினார்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை வீரம்மாள் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் இராம.தனலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் செ.இராமநாதன் நன்றி கூறினார்.

நாட்டாணிக்கோட்டை
நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீராசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லதாஸ்வரி வரவேற்றார். வீ.கே.நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி,
எம்.சுந்தர்ராஜன், மதியழகன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை பள்ளிக்கு வழங்கினர். நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்றுநர் சித்ரா முன்னிலை வகித்தார். நிறைவாக ஆசிரியர் திருஞானம் நன்றி கூறினார்.

பேராவூரணி 
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்றுனர் சித்ரா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் இரா.மாலதி வரவேற்றார். ஆசிரியர்கள் சுபா, பாலசுந்தரி, சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுபாஷ் நன்றி கூறினார். பெற்றோர்கள் சார்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கரிசவயல்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கரிசவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச் சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, சகுந்தலா, தலைமை ஆசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வேலாயுதம், ஜமாஅத் தலைவர் அப்துல் சலாம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சேக்தாவுத், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

கொன்றைக்காடு
கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி தலைமை வகித்தார். நீலகண்டன், கொன்றைக்காடு சுந்தரம், ரெங்கசாமி, கல்லூரணிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் இருதயசெல்வராஜ் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் கு.மகேஸ்வரி முன்னிலை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் ப.இராஜலெட்சுமி வரவேற்றார்.

விழாக்களில் பொதுமக்களால், பிரிண்டர், ஸ்கேனர், பீரோ, நாற்காலிகள், கடிகாரங்கள், கரும்பலகை, சில்வர் பாத்திரங்கள் மற்றும்  பல பொருட்கள் மக்களால் கொண்டு வரப்பட்டன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.