அதிராம்பட்டினம், மார்ச் 13
திருட்டு நகையை வாங்கியது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த அடகுக் கடைக்காரரிடம் அதிராம்பட்டினம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் ஒரு நகைக் கடையில் அண்மையில் நகைகள் திருடுபோனது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருட்டு நகைகளை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ள அடகுக் கடையில் விற்றதாகக் கூறினாராம். இதையடுத்து, அந்த நபரை அழைத்து கொண்டு அதிராம்பட்டினம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்தனர். பின்னர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள குறிப்பிட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சம்பந்தப்பட்ட அடகுக் கடைக்காரர், திருட்டு நகைகளை விற்றதாகக் கூறும் நபர் யார் என்று தனக்கு தெரியாது என போலீஸாரிடம் கூறினாராம். மேலும், அதுபோன்ற நகைகளை வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், அதிராம்பட்டினம் போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அடகுக் கடைக்காரரை அதிராம்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் அ.குமாரய்யா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருட்டு நகையை வாங்கியது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த அடகுக் கடைக்காரரிடம் அதிராம்பட்டினம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் ஒரு நகைக் கடையில் அண்மையில் நகைகள் திருடுபோனது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருட்டு நகைகளை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ள அடகுக் கடையில் விற்றதாகக் கூறினாராம். இதையடுத்து, அந்த நபரை அழைத்து கொண்டு அதிராம்பட்டினம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்தனர். பின்னர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள குறிப்பிட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சம்பந்தப்பட்ட அடகுக் கடைக்காரர், திருட்டு நகைகளை விற்றதாகக் கூறும் நபர் யார் என்று தனக்கு தெரியாது என போலீஸாரிடம் கூறினாராம். மேலும், அதுபோன்ற நகைகளை வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், அதிராம்பட்டினம் போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அடகுக் கடைக்காரரை அதிராம்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் அ.குமாரய்யா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.