.

Pages

Saturday, March 23, 2019

அதிராம்பட்டினத்தில் புயலால் சேதமடைந்த 54 வீடுகள் புனரமைத்து ஒப்படைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 23
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், கஜா புயல் மறுவாழ்வு திட்டம் ~ 2019 ன் கீழ், புயலால் சேதமடைந்த 107 வீடுகள் புனரமைத்து பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ஏ.எல் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அவ்வமைப்பின், மாநில பொதுச்செயலாளர் ஏ. முகமது ஹனீபா மன்பஈ, மாநிலச் செயலாளர் டி.ஏ பசிர் அகமது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர், கஜா புயலால் சேதமடைந்த அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, ராஜாமடம், கூடலிவயல், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 54 வீடுகள் புனரமைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், 30 மீனவக் குடும்பங்களுக்கு மீன் பிடி வலைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், ஏ.எல் பள்ளித் தாளாளர் அப்துல் ரெஜாக், திருவாரூர் மாவட்டம், கற்பகநாதர் குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஜி. செந்தில், அதிரை அகமது, வழக்குரைஞர் நிஜாமுதீன், ஜலாலுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பகுதி பொறுப்பளார் எஸ்.ஜெ சேக் செய்திருந்தார்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 

1 comment:

  1. அருமையான பணி. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் க்கு நன்றிகள். மேன்மேலும் இதைப்போன்ற பணிகள் தொடரட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.