.

Pages

Sunday, March 24, 2019

காதிர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத்துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை ஆற்றினார். முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் சிறப்புரை வழங்கினார்.

கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் என். நத்ஹர் பாவா வரவேற்றுப்பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், எம். நாசர், கல்லூரிப் பேராசிரியர் எஸ்.பி கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில், கல்லூரி முன்னாள் மாணவர்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி வரலாற்றுத்துறை பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பேராசிரியர்கள் ராஜாமாணிக்கம், இருளப்பன், சேக் அப்துல்லா, வெற்றி, ரிச்சர்ட் பெஸ்டி, வெற்றிச்செல்வன், சுகந்தா உள்ளிட்ட சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியை பரிதா பேகம் எழுதிய 'வரலாற்றுத்தேடல்கள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியினை, பேராசிரியை கிருஷ்ணமணி தொகுத்து வழங்கினார். முடிவில் பேராசிரியை பி.பாலம்மாள் நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.