தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று (10.03.2019) தொடங்கி வைத்தார்.
நமது மாவட்டத்தில் இன்று 5 வயதிற்குட்பட்ட 2,25,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து நகரப்பகுதியில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இப்பணியில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும் மற்றும் 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று கபிஸ்தலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்க போலியோ சொட்டு முகாமை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.
அதே போல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், (ரயில் நிலையம்), கோயில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம் வெளியூர் பயணம் செய்யும் குழந்தைகளுக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம், சுங்கச்சாவடி மற்றும் கோவில்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்மையங்கள் அதிகாலை முதல் இரவு வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கும் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகளுக்கும் 51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
உபயோகப்படுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் இடத்திலிருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்தின் வீரியம் குறையாமல் குளிர் பதன தொடர் மூலம் சுகாதாரத்துறையினர் பாதுகாப்பாக வழங்கி வருகின்றனர்.
இந்த தடுப்பு மருந்து அரசின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது.
போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் “இரண்டு சொட்டு” போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். பொது மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோபிநாத், சுகாதாரப் பணி துணை இயக்குநர் டாக்டர்.ஐ.ரவீந்திரன், துணை இயக்குநர் டாக்டர் டி.ரவிச்சந்திரன், வட்டார மருத்துவர் நவீன் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
நமது மாவட்டத்தில் இன்று 5 வயதிற்குட்பட்ட 2,25,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து நகரப்பகுதியில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இப்பணியில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும் மற்றும் 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று கபிஸ்தலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்க போலியோ சொட்டு முகாமை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.
அதே போல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், (ரயில் நிலையம்), கோயில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம் வெளியூர் பயணம் செய்யும் குழந்தைகளுக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம், சுங்கச்சாவடி மற்றும் கோவில்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்மையங்கள் அதிகாலை முதல் இரவு வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கும் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகளுக்கும் 51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
உபயோகப்படுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் இடத்திலிருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்தின் வீரியம் குறையாமல் குளிர் பதன தொடர் மூலம் சுகாதாரத்துறையினர் பாதுகாப்பாக வழங்கி வருகின்றனர்.
இந்த தடுப்பு மருந்து அரசின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது.
போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் “இரண்டு சொட்டு” போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். பொது மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோபிநாத், சுகாதாரப் பணி துணை இயக்குநர் டாக்டர்.ஐ.ரவீந்திரன், துணை இயக்குநர் டாக்டர் டி.ரவிச்சந்திரன், வட்டார மருத்துவர் நவீன் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.