.

Pages

Thursday, March 21, 2019

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் அமைக்கும் பணி நிறைவு!

அதிராம்பட்டினம், மார்ச்.21
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி, எஞ்சிய ஒரு சில பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் அமைக்கும் பணி நிறைவடைந்ததையொட்டி, சோதனைக்காக சிக்னல் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 26  முதல் 29 வரை சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும். இதில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கலந்துகொண்டு இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளம், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட், கேட் கீப்பர் அறை, சிக்னல்கள் போன்றவற்றில் ஆய்வை நடத்துவார் எனவும் தென்னக ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.