அதிரை நியூஸ்: மார்ச் 19
எதிர்வரும் (18-04-2019) அன்று நடைபெற உள்ள தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில், போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜன், அமமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் பொ.முருகேசன் ஆகியோர் பற்றிய சுய விவரக்குறிப்பு (பயோடேட்டா)
பெயர்: எஸ்.எஸ். பழனிமாணிக்கம். (திமுக)
பிறந்த ஆண்டு: 1950,
தந்தை: சுப்பையா
தாய்: மரகதம் அம்மாள்,
மனைவி: மகேஸ்வரி
மகள்: பிரீத்தி,
சொந்த ஊர்: தஞ்சை அருகே உள்ள நாட்டாணி (தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது).
வசிப்பிடம்: சீனிவாசபுரம், தஞ்சாவூர்.
சாதி: இந்து- கள்ளர்,
படிப்பு: எம்.ஏ., பி.எல்.
தேர்தல் அனுபவம்:
1984, 89, 91 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி
1996, 98, 99, 2004, 2009 ஆகிய ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் தஞ்சை தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி. 2004-2014ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சர். தற்போது தஞ்சை தொகுதியில் 9ஆது முறையாக போட்டியிடுகிறார்.
கட்சிப் பதவி:
மாநில மாணவரணி, விவசாய அணி இணை செயலராகவும், மத்திய வேளாண்மை நிலைக்குழு தலைவராகவும், தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலராகவும் பணியாற்றியவர். தற்போது திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக உள்ளார்
பெயர்: என்.ஆர் நடராஜன் (தமாகா)
பிறந்த தேதி: 10-02-1967
வயது: 52
சொந்த ஊர்: பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை
பெற்றோர்: என். ராமசாமி தேவர் ~ வைரமணி அம்மாள்
மனைவி: சுகன்யா
கல்வித்தகுதி: தஞ்சாவூர் தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் தஞ்சாவூர் சண்முகா பொறியியல் கல்லூரியில் (தற்போது சாஸ்த்ரா) பொறியியல் பட்டம் பெற்றவர்.
தொழில்: விவசாயம், பிளாட் புரொமோட்டர்ஸ்
கட்சிப் பொறுப்பு: த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர்
பிற பொறுப்புகள்: பட்டுக்கோட்டை வர்த்தக சங்க கெளரவத் தலைவர், திருவையாறு தியாகராஜ பிரம்ம மகா சபை செயற்குழு உறுப்பினர்,
குடும்பப் பின்னணி: என்.ஆர் நடராஜனின் மூத்த சகோதரர் என்.ஆர் ரெங்கராஜன் 2001 முதல் 2016 வரை பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். நடராஜானின் மாமனார் வி.என் சுவாமிநாதன் 1980 - 84ஆம் ஆண்டுகளின் புதுக்கோட்டை தொகுதி மக்களவை உறுப்பினர்.
பெயர்: பொ.முருகேசன் (அமமுக)
பிறந்த தேதி: 11.08.1957
ஊர்: தட்டான்கோவில், திருவாரூர் மாவட்டம்.
படிப்பு: எம்.எஸ்.சி.,இயற்பியல்,
ஜாதி: கள்ளர்
தொழில்:
தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக குழும நிறுவனர், 1986ஆம் ஆண்டு சிறிய அளவில் கணினி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் 1994ஆம் ஆண்டு கலை கல்லூரியும், 2000ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியும், 2004ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கினார். 2008ஆம் ஆண்டு பொன்னையா ராமஜெயம் பல்கலைக்கழகத்தை தொடங்கினார். 2014ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரியும், 2016ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் மருத்துவக் கல்லூரியும் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 31 ஆண்டுகளாக பொன்னையா ராமஜெயம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை தஞ்சாவூரில் நடத்தி வருகிறார்.
கட்சி அனுபவம்:
1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினர்.
எதிர்வரும் (18-04-2019) அன்று நடைபெற உள்ள தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில், போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜன், அமமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் பொ.முருகேசன் ஆகியோர் பற்றிய சுய விவரக்குறிப்பு (பயோடேட்டா)
பெயர்: எஸ்.எஸ். பழனிமாணிக்கம். (திமுக)
பிறந்த ஆண்டு: 1950,
தந்தை: சுப்பையா
தாய்: மரகதம் அம்மாள்,
மனைவி: மகேஸ்வரி
மகள்: பிரீத்தி,
சொந்த ஊர்: தஞ்சை அருகே உள்ள நாட்டாணி (தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது).
வசிப்பிடம்: சீனிவாசபுரம், தஞ்சாவூர்.
சாதி: இந்து- கள்ளர்,
படிப்பு: எம்.ஏ., பி.எல்.
தேர்தல் அனுபவம்:
1984, 89, 91 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி
1996, 98, 99, 2004, 2009 ஆகிய ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் தஞ்சை தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி. 2004-2014ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சர். தற்போது தஞ்சை தொகுதியில் 9ஆது முறையாக போட்டியிடுகிறார்.
கட்சிப் பதவி:
மாநில மாணவரணி, விவசாய அணி இணை செயலராகவும், மத்திய வேளாண்மை நிலைக்குழு தலைவராகவும், தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலராகவும் பணியாற்றியவர். தற்போது திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக உள்ளார்
பெயர்: என்.ஆர் நடராஜன் (தமாகா)
பிறந்த தேதி: 10-02-1967
வயது: 52
சொந்த ஊர்: பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை
பெற்றோர்: என். ராமசாமி தேவர் ~ வைரமணி அம்மாள்
மனைவி: சுகன்யா
கல்வித்தகுதி: தஞ்சாவூர் தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் தஞ்சாவூர் சண்முகா பொறியியல் கல்லூரியில் (தற்போது சாஸ்த்ரா) பொறியியல் பட்டம் பெற்றவர்.
தொழில்: விவசாயம், பிளாட் புரொமோட்டர்ஸ்
கட்சிப் பொறுப்பு: த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர்
பிற பொறுப்புகள்: பட்டுக்கோட்டை வர்த்தக சங்க கெளரவத் தலைவர், திருவையாறு தியாகராஜ பிரம்ம மகா சபை செயற்குழு உறுப்பினர்,
குடும்பப் பின்னணி: என்.ஆர் நடராஜனின் மூத்த சகோதரர் என்.ஆர் ரெங்கராஜன் 2001 முதல் 2016 வரை பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். நடராஜானின் மாமனார் வி.என் சுவாமிநாதன் 1980 - 84ஆம் ஆண்டுகளின் புதுக்கோட்டை தொகுதி மக்களவை உறுப்பினர்.
பெயர்: பொ.முருகேசன் (அமமுக)
பிறந்த தேதி: 11.08.1957
ஊர்: தட்டான்கோவில், திருவாரூர் மாவட்டம்.
படிப்பு: எம்.எஸ்.சி.,இயற்பியல்,
ஜாதி: கள்ளர்
தொழில்:
தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக குழும நிறுவனர், 1986ஆம் ஆண்டு சிறிய அளவில் கணினி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் 1994ஆம் ஆண்டு கலை கல்லூரியும், 2000ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியும், 2004ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கினார். 2008ஆம் ஆண்டு பொன்னையா ராமஜெயம் பல்கலைக்கழகத்தை தொடங்கினார். 2014ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரியும், 2016ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் மருத்துவக் கல்லூரியும் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 31 ஆண்டுகளாக பொன்னையா ராமஜெயம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை தஞ்சாவூரில் நடத்தி வருகிறார்.
கட்சி அனுபவம்:
1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.