பேராவூரணி மார்ச்.17-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்திய அரசின் கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையில், அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மா.அருள்முத்தையா, இரா.சுந்தர், ரா.தென்னவன் பங்கேற்று கலந்து கொண்டு 500 மாணவர்கள் மற்றும் 1000 பெற்றோர்களுக்கு மொத்தம் 3,100 தென்னங்கன்றுகள் மற்றும் பல வகையான மரக்கன்றுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், உயிர்த்துளி நற்பணி இயக்க நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் வி.கே.குமார் வரவேற்றார். துறையூர் எல்ஐசி ராமசாமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு இதுவரை 20 ஆயிரம் தென்னங்கன்றுகள் மற்றும் பல வகையான மரக்கன்றுகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்திய அரசின் கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையில், அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மா.அருள்முத்தையா, இரா.சுந்தர், ரா.தென்னவன் பங்கேற்று கலந்து கொண்டு 500 மாணவர்கள் மற்றும் 1000 பெற்றோர்களுக்கு மொத்தம் 3,100 தென்னங்கன்றுகள் மற்றும் பல வகையான மரக்கன்றுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், உயிர்த்துளி நற்பணி இயக்க நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் வி.கே.குமார் வரவேற்றார். துறையூர் எல்ஐசி ராமசாமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு இதுவரை 20 ஆயிரம் தென்னங்கன்றுகள் மற்றும் பல வகையான மரக்கன்றுகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.