.

Pages

Saturday, March 23, 2019

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் மார்ச் 29 ல் அதிவேக சோதனை ஓட்டம்!

அதிராம்பட்டினம், மார்ச்.23
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் மார்ச் 29ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை இடையிலான ரயில் வழித்தடத்தில் வரும் மார்ச் 26 ந் தேதி முதல் மார்ச் 29 வரை தென்மண்டல (பெங்களூரு) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்த உள்ளார். மேலும், வரும் மார்ச் 29 (வெள்ளிக்கிழமை) பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையிலான ரயில் பாதையில், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. எனவே, காலை 10 மணி முதல் 5 மணி வரையில் பொதுமக்கள் யாரும் இந்த வழித்தடத்தில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. முக்கிய தகவல்கள தெரியப்படுத்தும்
    அதிரை நியூஸ்க்கு மனமார்ந்த
    நன்றி நன்றி நன்றி🌹🌹🌹

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.