.

Pages

Wednesday, March 13, 2019

அதிராம்பட்டினத்தில் வாகனச் சோதனையில் ரூ.2.20 லட்சம் பறிமுதல்!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், கரையூர் தெரு சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற .ரூ.2,20,500 ரொக்கத் தொகையை தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது: -
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியின் அதிராம்பட்டினம் கரையூர் தெரு சோதனை சாவடியில் 12.03.2019 அன்று காலை 09.20 மணியளவில் மேலபழஞ்சூரிலிருந்து முத்துப்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்த மாருதி ஷிப்ட் என்ற நான்கு சக்கர வாகனம் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் சோதனை செய்யப்பட்டது.  அப்போது வாகனத்தை ஒட்டி வந்த விஜயன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கண்டறியப்பட்ட ரூ.2,20,500 ரொக்கத் தொகை கண்காணிப்பு அலுவலர் கண்ணகி அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ரொக்க தொகை பட்டுக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் சீல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.