பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், கஜா புயலால் சேதமடைந்த 107 வீடுகள் புனரமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மஹாலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் திருவாரூர் மாவட்டத் தலைவர் ஏ.ராஜ் முகமது வரவேற்றுப் பேசினார்.
அவ்வமைப்பின், மாநிலத் தலைவர் எம்.முகமது இஸ்மாயில், மாநில பொதுச் செயலாளர் ஏ. ஹாலித் முகமது ஆகியோர் சிறப்புரையாற்றி, கஜா புயலால் சேதமடைந்த 107 வீடுகள் புனரமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கினர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின், மாநில செயலாளர் ஏ.அபுபக்கர் சித்திக், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் என்.சஃபியா, சி.எப்.ஐ மாநில பொருளாளர் ஜெ.ரியாஸ் அகமது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ், அதிராம்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள் எம்.எஸ்.எம் முகமது அபுபக்கர், பி.எம்.கே தாஜுதீன், ம.செ ஜபருல்லா, ஏ. தாஜூதீன், ஏ.நெய்னா முகமது, சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கஜா புயல் பேரிடர் மீட்பு பணியில் களப்பணியாற்றியவர்கள் மற்றும் உதவியவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது. கஜா புயலில் டெல்டா பகுதியில் பி.எப்.ஐ அமைப்பினர் ஆற்றிய மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் பற்றி ஒளித்திரை மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது.
முடிவில், அவ்வமைப்பின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எம். ஷேக் அஜ்மல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயாத்தார்கள் மற்றும் அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.