தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உதவித் தேர்தல் அலுவலரும், முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியருமான அ.கமலக்கண்ணன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தார்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தோர் அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். சாதி, மத, இன உணர்வுகளுக்கு இடமளிக்காமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். காசுக்கு வாக்களிக்க கூடாது. நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும்" என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி சேதுசாலை, பட்டுக்கோட்டை சாலை, ஆவணம் சாலை, கடைவீதி, அறந்தாங்கி சாலை, குமரப்பா பள்ளி வழியாக பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் தேர்தல் துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.