![]() |
மாணவி ஜெயஸ்ரீக்கு 'பெஸ்ட் பெர்பாமன்ஸ்' விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது |
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில், CHEM FEST ~ 2019 விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.பார்த்திபன் கலந்துகொண்டு பேசுகையில்; கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் மாணவர்கள் எதிலும் வெற்றி பெறலாம். மாணவர்கள் ஆராய்சிகளில் கவனம் செலுத்தவேண்டும்' என்றார். பின்னர், ஆராய்சிகளை மேற்கொள்வது எப்படி என்பது பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர் பட்டிமன்ற நடுவர் அதிரை ஏ.அண்ணா சிங்காரவேலு கலந்துகொண்டு பேசுகையில்; 'மாணவர்கள் குறிக்கோளுடன் முயற்சி செய்தால் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும்' என்றார்.
விழாவிற்கு கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொ) எம்.முகமது முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பிடித்த கல்லூரி இரண்டாமாண்டு மாணவி ஜெயஸ்ரீக்கு 'பெஸ்ட் பெர்பாமன்ஸ்' விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, பேராசிரியர் பி. முகமது சிராஜுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியினை பேராசிரியர் என்.எம்.ஐ அல்ஹாஜ் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் மாணவி ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.