அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், ஜிஎஸ்டி ~ பொருளாதார விளைவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) எம். முகமது முகைதீன் கருத்தரங்கை தொடங்கி வைத்து அறிமுக உரை நிகழ்த்தினார். துணை முதல்வர் எம்.நாசர் வரவேற்றுப் பேசினார். பட்டுக்கோட்டை ஆடிட்டர் ஹாபிஸ் அகமது, பேராசிரியர்கள் பி.சிலார் முகமது, ஏ.ஆஷிக் இக்பால், கே.செய்யது அகமது கபீர், எச்.சுலைமான், ஆகியோர் பங்கேற்று, ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், அனைத்து நாடுகளிலும் இதனால் ஏற்பட்ட தன்மைகள், முன்னேற்றம், நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு, பயன் முழுவதும் நுகர்வோருக்குச் சென்றடைதல் குறித்து விவரித்தனர்.
முடிவில், பேராசிரியர் ஏ.ஜியாவுதீன் நன்றி கூறினார். இதில், பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.