.

Pages

Sunday, March 10, 2019

தமிழகம் ~ புதுவையில் ஏப்.18-ல் தேர்தல்: மே 23 ல் வாக்கு எண்ணிக்கை!

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

முதற்கட்ட தேர்தல்- ஏப்ரல் 11 தேதி
இரண்டாம் கட்டத் தேர்தல் - ஏப்ரல் 18 தேதி
மூன்றாம் கட்டத் தேர்தல் - ஏப்., 23 தேதி
நான்காம் கட்டத் தேர்தல் - ஏப்., 29 தேதி
5வது கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதி
6-ம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி
7-ம் கட்ட தேர்தல் 19 ஆம் தேதியும் நடைபெறும். அனைத்துக் கட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று எண்ணப்படும். 

தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவனை விபரங்கள் வருமாறு:
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்: 26.03.2019
வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நாள்: 27.03.2019
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: 29.03.2019
வாக்குப் பதிவு: 18.04.2019
வாக்கு எண்னிக்கை நடைபெறும் நாள்: 23.05.2019

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.