அதிரை நியூஸ்: நவ.30
இறைவனின் பேரருளால் மிக நீண்ட பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் செடியன்குளம் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளது. செடியன்குளம் கடந்த மாதத்தில் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளதையும் அறிவீர்கள்.
கடந்த இரு நாட்களாக நமதூரில் பெய்துவரும் தொடர்மழை மேலும் நீடித்தால் செடியன்குளம் இன்றிரவோ அல்லது நாளையோ நிரம்பி வழியக்கூடும். இவ்வாறு வழியும் நீர் பிலால் நகரையே மேலும் வெள்ளமாய் சூழ்ந்து நிற்கும்.
இது ஒருபுறமிருக்க...
தற்போதுள்ள செடியன்குளத்தின் கரைகள் மிக மிக ஆழமானவை என்பதுடன் வழுக்கும் தன்மையும் கொண்டவை. எனவே, நீச்சல் தெரியாதவர்கள் மற்றும் சிறுவர்கள் செடியன்குளத்தில் குளிக்காமல் தவிர்ந்து கொள்வது நல்லது. இவ்விஷயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக மிக அவசியம், அவசரம்.
அதிரை அமீன்
இறைவனின் பேரருளால் மிக நீண்ட பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் செடியன்குளம் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளது. செடியன்குளம் கடந்த மாதத்தில் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளதையும் அறிவீர்கள்.
கடந்த இரு நாட்களாக நமதூரில் பெய்துவரும் தொடர்மழை மேலும் நீடித்தால் செடியன்குளம் இன்றிரவோ அல்லது நாளையோ நிரம்பி வழியக்கூடும். இவ்வாறு வழியும் நீர் பிலால் நகரையே மேலும் வெள்ளமாய் சூழ்ந்து நிற்கும்.
இது ஒருபுறமிருக்க...
தற்போதுள்ள செடியன்குளத்தின் கரைகள் மிக மிக ஆழமானவை என்பதுடன் வழுக்கும் தன்மையும் கொண்டவை. எனவே, நீச்சல் தெரியாதவர்கள் மற்றும் சிறுவர்கள் செடியன்குளத்தில் குளிக்காமல் தவிர்ந்து கொள்வது நல்லது. இவ்விஷயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக மிக அவசியம், அவசரம்.
அதிரை அமீன்