.

Pages

Friday, November 1, 2019

திறந்த கிணறு, ஆழ்குழாய் கிணறு மூடி பராமரிப்பது தொடர்பாக கலந்தாய்வுக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆடசியர் அலுவலக கூட்டரங்கில் பயன்பாட்டில் இல்லாத திறந்த கிணறுகள் மற்றம் ஆழ்குழாய் கிணறுகளை பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு இல்லாதவாறு மூடி பராமரிப்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தலைமையில் இன்று (01.11.2019) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத திறந்த கிணறுகள் மற்றம் ஆழ்குழாய் கிணறுகளை தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடன் கல்தாய்வு கூட்டத்தில் தெரிவித்தாவது:

அனுமதி பெற்ற ஒவ்வொருவரும் மற்றும் பயன்பாட்டில் உள்ள அல்லது பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் உரிமையாளர் கிணற்றை தோண்டும்போது ஆழப்படுத்தும்போது அல்லது புனரமைக்கும்போது பணிகளை மேற்கொள்ளும் நபர் துணை விதி 2 ல் வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பின்பற்றுகின்றாரா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்படி பணியை மேற்கொள்கின்ற நபர் இவ்விதிகளின்படி முறையான பதிவுச்சான்று வழங்கப்பட்டவரா என சரி பார்க்கவேண்டும். பணி இடைவேளையின்போதும். பணி நிறுத்தப்பட்ட பின்னரும் அந்தக்கிணறு சாpயான முறையில் மு்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், கைவிடப்பட்ட கிணறுகள். களிமண், மணல், சிறுகற்கள் மற்றும் உரிய பிற பொருட்களைக்கொண்டு தரைமட்ட அளவிற்கு நிரப்பப்படவேண்டும்.

கிணறுகளை தோண்டும், ஆழப்படுத்தும் மற்றும் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் தொழிலை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும்  பணிகளை ஆரம்பிக்கும் முன்  கிணற்றின் உரிமையாளர் படிவம் “ஆ”வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பணிகளை செய்வதற்கான அனுமதி பெற்றுள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

கிணற்றின் வகை. ஆழம் மற்றும் குறுக்களவு, பணி மேற்கொள்பவர் மற்றும் கிணற்றின் உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்களையும் பணி நடக்கும் இடத்தில் கவனத்தை கவரும் வகையில் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்படவேண்டும். கிணறு தொடர்பான பணி மேற்கொள்ளும் இடத்தைச் சுற்றிலும் முள்கம்பிவேலி அல்லது தகுந்த தடுப்பு அமைக்கப்படவேண்டும். 0.5 x 0.5 x 0.6 மீட்டர் அளவிலான சிமிட்டி அல்லது சிமிட்டி கற்காரையிலான தளம் நிலமட்டத்திலிருந்து 0.3 மீட்டர் மேற்புறமும், 0.3 மீட்டர் நிலத்திற்கு கீழ்புறமும் உள்ளவாறு கிணற்றை சுற்றிலும் கட்டப்படவேண்டும்.

பணி இடைவேளையின்போது துளையிடப்பட்ட குழி அல்லது கிணறு சரியான முறையில் மூடப்பட்டிருத்தல் வேண்டும். பணி முடிவுற்ற பின் கிணற்றைச் சுற்றி உள்ள சகதி குழிகளும், கால்வாய்களும் நிரப்பி மூடப்படவேண்டும். முன்பிருந்த நிலைக்கு  தரைமட்ட நிலையை கொண்டு வரவேண்டும். கிணற்றின் மேற்புறத்தை எகு தகடுகளாலும், ஒன்றோடு ஒன்று இணைத்து பற்ற வைக்கப்பட்ட மூடியைக்கொண்டோ அல்லது இரும்பு குழாயின் மேற்புறத்தை உறுதியான மு்டியைக்கொண்டு மு்டி திருகு மரையாணிகளைக் கொண்டு குழாயுடன் இணைத்து மூடவேண்டும்.

செயல் அலுவலர் எந்த ஒரு கிணற்றின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளிலும். ஏதேனும் குறைபாடு இருப்பதாக கருதும்பட்சத்தில் எழுத்து மு்லமான அறிவிப்பு மூலம் கிணற்றின் உரிமையாளருக்கோ அல்லது பணி மேற்கொள்ளும் நபருக்கோ இதர பாதுகாப்பு முன்னேற்பாடுகளை சரியான முறையில் செயல்படுத்த அறிவுறுத்துவார். அவ்வறிவுரைகள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தெரிவித்தார்.

கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ் மற்றும் தொர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.