.

Pages

Monday, November 11, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 72 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/11/2019 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  இக்பால் (உறுப்பினர்)
முன்னிலை           : S.சரபுதீன் (தலைவர்)
வரவேற்புரை       : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)
சிறப்புரை              : A.M அஹமது ஜலீல் (செயலாளர்)
அறிக்கை வாசித்தல்:  ஷேக் மன்சூர் (துணை செயலாளர்)
நன்றியுரை      : அகமது முனாஸ்கான் (ஜித்தா)

தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் இவ்வருடம் 2019-க்கான பென்ஷன் திட்டத்திற்கு உதவிய அதிரை வாசிகள் அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் வரும் 2020-க்கான பென்ஷன் திட்டத்தில் பெயர்களை பதிவு செய்து இதே ஆதரவை தந்து அதற்கான நன்மைகளை அடைந்திருமாறு இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

2) அதிரை பைத்துல்மால் சேவை திட்டத்தின் வரிசையில் பெண்கள் சுய தொழில் தையல் பயிற்சி ( கடந்த 3 ½ வருடமாக ) சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த பயிற்சிக்கு நமதூர் சகோதரிகள் மற்றும் மாணவிகள் சரியான முறையில் கற்று பயனடைந்தால் வரும் காலங்களில் பெண்களின் உடைகளை தாமாகவே தைத்து பயனடையலாம் என்பதையும், அதற்கான முழு ஆதரவு கொடுத்திடுமாறு மீண்டும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

3) கடந்த மாதம் தமிழக அரசின் பென்ஷன் மாத உதவி தொகை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்து பைத்துல்மாலின் சுமையை குறைக்கும் திட்டத்தின் பிரகாரம் உதவிய அனைவர்களையும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகள் மற்றும் சலுகைகள் சரியான முறையில் சென்று அடைய ABM மேலும் முன்னெடுத்து செம்மையாக செயல்படுமாறு இக்கூட்டத்தில் ஒருமனதாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப்பட்டு அதற்கான ஒரு பொறுப்புதாரி ஒருவரை ABM-HO தேர்ந்தெடுத்து அதில் மட்டும் முழு கவனம் செலுத்தி அரசு தரக்கூடிய சலுகைகளை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மனுக்கள் சென்று அடைந்தால் ஏழை எளிய மக்கள் பயனடைய உறுதுணையாக அமையும் என்பதை வலியுறுத்தப்பட்டது.

4) இத்துடன் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் ஏழை மாணவ மாணவிகள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் குறைகளை கண்டெடுத்து சரியான முறையில் தேர்வு செய்து வைத்து கொண்டால் சரியான காலங்கள் வரும் போது அரசு அதிகாரிகளிடம் சரியான விண்ணப்பங்களை ஆளும் கட்சி பிரமுகர்களின் உதவியுடன் சென்றடைய உறுதுணையாக அமையும் என்பதை இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

5) வட்டியில்லா நகைக்கடன் விஷயமாக நன்கு அறிந்து சரியான தேவையை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வண்ணம் மிகவும் செம்மையாக செயல்படுமாறும் பயனாளிகளிடம் அதற்கான கால கெடுவுக்குள் நகையை திருப்பி பெற்று கொள்ளுமாறு இவ்விஷயத்தில் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) இஹ்லாஷான முறையில் நமதூர் ஏழை எளிய மக்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக ABM ரியாத் கிளையின் மாதாந்திர சந்தா தொகை வசூலிக்கும் விசயமாக கீழுள்ள பொறுப்புதாரிகள் அந்தந்த ஏரியாவகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொறுப்புதாரிகள்: 
1) HARA – ABDUL MALIK
2) BATHA – JAMAL MOHAMED
3) MALAZ – FAJROON
4) OLAYA – AHAMED ASRAF
5) SULAI – IMAMKHAN

7) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு DECEMBER 14-ம் தேதி பத்ஹா சிட்டிக்குள் நடத்துவதாக இருப்பதால் நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

குறிப்பு: கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாத சகோதர்கள் தயவு செய்து தவறாமல் தங்களின் மாத சந்தாவான சதக்காவை பொறுப்புதாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.