அதிராம்பட்டினம், நவ.24
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல் குறித்து கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித்தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜ்முதீன் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கல்வி ஆலோசகர் சென்னை கே.யூனுஸ்மல்கான், சென்னை முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எப்.சாகுல் ஹமீது, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நெய்னா முகமது ஆகியோர் கலந்துகொண்டு, 2019–2020–ம் கல்வியாண்டில் 10–ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி?, மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், மாணவர்கள், பெற்றோர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர்.
நிகழ்ச்சியில், 'தேர்வு சுகமானதா?, சுமையானதா?' எனும் தலைப்பில், ஆசிரியர்கள் ~ மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜ்முதீன் நடுவராக இருந்தார். 'தேர்வு சுகமானது' எனும் தலைப்பில், பள்ளி ஆசிரியர் ராமசாமி, பள்ளி மாணவர்கள் ஏ.முகேஷ், பி.வீரமணி ஆகியோரும், 'தேர்வு சுமையானது' எனும் தலைப்பில் பள்ளி ஆசிரியர் மு.உமர் பாருக், பள்ளி மாணவர்கள் மாதவன், மனோஜ் ஆகியோரும் பேசினர். நிறைவில், பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. முடிவில், பள்ளி ஆசிரியை பி.அன்புக்கரசி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்கள் கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல் குறித்து கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித்தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜ்முதீன் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கல்வி ஆலோசகர் சென்னை கே.யூனுஸ்மல்கான், சென்னை முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எப்.சாகுல் ஹமீது, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நெய்னா முகமது ஆகியோர் கலந்துகொண்டு, 2019–2020–ம் கல்வியாண்டில் 10–ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி?, மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், மாணவர்கள், பெற்றோர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர்.
நிகழ்ச்சியில், 'தேர்வு சுகமானதா?, சுமையானதா?' எனும் தலைப்பில், ஆசிரியர்கள் ~ மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜ்முதீன் நடுவராக இருந்தார். 'தேர்வு சுகமானது' எனும் தலைப்பில், பள்ளி ஆசிரியர் ராமசாமி, பள்ளி மாணவர்கள் ஏ.முகேஷ், பி.வீரமணி ஆகியோரும், 'தேர்வு சுமையானது' எனும் தலைப்பில் பள்ளி ஆசிரியர் மு.உமர் பாருக், பள்ளி மாணவர்கள் மாதவன், மனோஜ் ஆகியோரும் பேசினர். நிறைவில், பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. முடிவில், பள்ளி ஆசிரியை பி.அன்புக்கரசி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்கள் கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.