.

Pages

Wednesday, November 6, 2019

பிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில் புதிய தார்சாலை ~ 26 லட்சத்தில் வடிகால் வசதி!

அதிராம்பட்டினம், நவ.16
பிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில், புதிய தார்சாலை அமைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் தொடங்க இருப்பதாக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டுதோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு நிலவும். மேலும், இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிக்கும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். இதுகுறித்து, தினமணி நாளிதழில் செய்திகள் அவ்வப்போது பிரசுரமாகி இருந்தது.

மேலும், பிலால் நகரில் புதிதாக தார் சாலை, மழைநீர் / கழிவு நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி  இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ மற்றும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் இப்பகுதி ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் மனுக்கள் அளித்து, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதியின் பேரில், 2018-2019 ஆம் ஆண்டு Scheme Component of Pooled Assigned Revenue (SCPAR) திட்டத்தின் கீழ், பிலால் நகரில் ரூ.8.87 லட்சத்தில், 350 மீட்டர் நீளத்தில் புதிய தார்சாலை, ரூ.8.24 லட்சத்தில், 325 மீட்டர் நீளத்தில் மற்றொரு புதியதார் சாலை அமைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் தொடங்க இருப்பதாக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், பிலால் நகரில் ரூ.26 லட்சத்தில், மழை / கழிவு நீர் வடிகால் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ். விரைவில் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்கள் நிம்மதி அடைய துஆ செய்வோமாக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.