.

Pages

Saturday, November 30, 2019

அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் நேர்காணல் (முழு விவரம்)

பட்டுக்கோட்டை, நவ.30
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்த அதிராம்பட்டினம் பேரூர் திமுகவினரிடம் பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நோ்காணல் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேரூர் மன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு மொத்தம் 44 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், ஆர்.உமா, வாசகி, ஜெயா ( 1-வது வார்டு), சித்தி மர்ஜிக்கா இப்ராஹீம், சித்தி ஆய்ஷா அஸ்லம் ( 2-வது வார்டு), ஆர்.கிருத்திகா, சாமு. ஆமினா ( 3-வது வார்டு), இராம.குணசேகரன் ( 4-வது வார்டு), ஜுபைரியா, சபியா அம்மாள் ( 5-வது வார்டு), அ.அகமது முகைதீன், ஏ.நூர் முகமது, கே.இத்ரீஸ் அகமது, எஸ்.எச் அஸ்லம் ( 6-வது வார்டு), எம்.நூர் முகமது, எம். பகுருதீன், என்.ஏ முகமது யூசுப், முகமது சேக்காதி, ஏ.எம் அப்துல் ஹலீம் ( 7-வது வார்டு), மு.நிலோபர், வஹிதா ரோஸ் ( 8-வது வார்டு), இஸ்மாயில் நாச்சியா, சித்தி பாத்திமா ( 9-வது வார்டு), மு.ராலியா ( 10-வது வார்டு), ஐனூல் மர்ஜான் ( 11-வது வார்டு), சா.சண்முகவேல் ( 12-வது வார்டு), த.முத்துராமன் ( 13-வது வார்டு), எ.உம்மல் மர்ஜான், பெளஜூல் அஜீமா, பையாஸ் பானு ( 14-வது வார்டு), தில் நவாஸ் பேகம், ஜெஹபர் நாச்சியா, மெகருன்னிசா, ராபியத்துல் அரேபியா ( 15-வது வார்டு), ஏ.எம்.ஒய் அன்சர்கான். எம்.அகமது ( 16-வது வார்டு), எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான் ( 17-வது வார்டு), எ. அகமது ஹாஜா ( 18-வது வார்டு), கே. சம்பத் குமாரி, எம்.தெளலத், கண்ணாமணி ( 19-வது வார்டு), வீ. ராமசாமி, கே.ஜெயராமன்  ( 20-வது வார்டு), எஸ்.சுப்பிரமணியன் ( 21-வது வார்டு) ஆகியோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

மேலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா், பட்டுக்கோட்டை நகராட்சி வாா்டு உறுப்பினா், பட்டுக்கோட்டை, மதுக்கூா் ஒன்றியக்குழு உறுப்பினா், அதிராம்பட்டினம், மதுக்கூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிட அதற்கான கட்டணம் செலுத்தி ஏற்கெனவே மனு அளித்திருந்த சுமாா் 90 பெண்கள் உள்பட 200 பேரிடம் இந்த நோ்காணல் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலா் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து நோ்காணலை நடத்தினாா். அப்போது மாவட்ட திமுக நிா்வாகிகள் வி. கோவிந்தராஜ், கா. அண்ணாதுரை, எல்.ஜி.அண்ணா, பட்டுக்கோட்டை, மதுக்கூா் ஒன்றியச் செயலா்கள், அதிராம்பட்டினம், மதுக்கூா் பேரூா் செயலா்கள் உடனிருந்தனா்.
 
 
 
 
 
 
 
  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.